Don't Miss!
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
துறுதுறு நஸ்ரியா, துடிப்பான ஜெய்- ஆனாலும் மனம் கவர மறுக்கும் நிக்காஹ்!
சென்னை: இதோ வருகிறது... அதோ வருகிறது என்று கூறிக் கொண்டிருந்த "திருமணம் எனும் நிக்காஹ்" படம் ஒருவழியாக வந்தேவிட்டது.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படம் அதற்குள் ஆயிரெத்தெட்டு சோதனைகளைக் கடந்து விட்டது.
படத்தில் குறை, நிறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் சில விஷயங்கள் ரசிக்க வைக்கின்றன. அப்படி கவர்ந்த விஷயங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறோம்...
மாமா.. செல்லை சித்த ஆப் பண்ணுங்கோ
குடும்பமே ஆவணி அவிட்டத்திற்கு பூணூல் போட்டுக் கொண்டிருக்கும் போது, ஒருபக்கம் அத்திம்பேரின் நச்சரிப்பு, தன்னுடைய மகள் மைதிலியை விஜயராகவாச்சாரிக்கு (அதாங்க நம்ம ஜெய்) திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று.
டைமிங்பா டைமிங்
அவர் சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்கும்போதே திடீர், திடீரென்று செல்போன் ரிங்டோன்கள் அவருடைய பேச்சுக்கும் மற்றவர்களின் பதிலுக்கும் இடையில் தொணதொணக்கின்றன.. டைமிங் காட்சி என்ற பெயரில் இப்படி ஒரு படுத்தல்...
மைதிலி என் உயிர்டா
இதில் அந்த குடுமி பையன் வேற "டேய் மைதிலி என் உயிர்டா" என்று ஒரே ஃபீலிங்ஸ்... அடிக்கடி செந்தில் மாதிரி தூக்கு வேற மாட்டிக் கொள்ளச் செல்கிறார்.
பாண்டியராஜன் ரவுசு
பாண்டியராஜன் வேறு யாரும் இல்லை நம்ம முன்னாள் ஹீரோதான். இன்னாள் "கட்டைப்புலி"..இல்லை இல்லை 'ரோஷன் குமார்'. ஒரு டிக்கெட்டுக்காக பேரை மாத்திக் கொண்டு படாதபாடு படும் அவர் கடைசியில் தன் உண்மையான பெயரையே மறந்து விடுகிறாராம்.. பெயரை மாத்திக்கிட்டு போறதெல்லாம் ஓகே.. ஆனா அதுக்காக இந்த அளவுக்கு காட்சிகள் ரொம்பவே ஓவர்!
பாவடை, தாவணி கூட அழகுதான்
படத்தில் நஸ்ரியாவின் உடைகள் அனைத்தும் அழகு. கண்டிப்பாக பெண்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் 'கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்' பாடலில் வரும் ராஜஸ்தானும் இல்லாமல், நம்ம ஊர் பட்டுப் பாவாடையும் இல்லாமல் இருக்கும் அவரது உடை ஒரு தினுசாத்தான் இருக்கு.
அசத்தும் ஆடை வடிவமைப்பு
மற்றொரு கதாநாயகியாக வரும் ஹேபா பட்டேலின் காக்ரா சோளி பெண்களை மெய்மறந்து பார்க்க வைக்கின்றது. வேலைப்பாடுகளும் அருமைதான். ஊதாவும், சந்தனமும் கலந்த கல் வேலைப்பாடுகள் அருமை.
அன்புதான் அனைத்திற்கும் பாலம்
மதங்களைத் தாண்டி, அது பற்றிய குழப்படிகளையும் தாண்டி பகவத் கீதையும், குரானும், பைபிளும் சொல்வது அன்பும், யாரையும் ஏமாற்றதே போன்றவைதான் என்ற கருத்துகள் அருமை.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!