Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தலைப்பு பெரிய விஷயமே இல்லை... நானே விட்டுக் கொடுக்கிறேன்! - எஸ்பி ஜனநாதன்
இயற்கை, ஈ, பேராண்மை என வித்தியாசமான படங்கள் தந்த எஸ்பி ஜனநாதன் அடுத்து புறம்போக்கு என்ற தலைப்பில் ஆர்யா - விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்குகிறார். இந்தப் படத்தை யுடிவி தயாரிக்கிறது.
அறிவிப்பு வெளியான அடுத்த நாளே இந்தத் தலைப்பு தனக்கே சொந்தம் என நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் அறிவித்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் எஸ்பி ஜனநாதனிடம் கருத்து கேட்டபோது, "நட்ராஜ் அப்படிக் கூறியதை மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர் இருவரும் போனில் பேசினோம்.
தலைப்பு ஒரு பிரச்சினை இல்லை. எந்தத் தலைப்பாக இருந்தால் என்ன, கதைதான் முக்கியம். புறம்போக்கு தலைப்பை நட்ராஜ் எனக்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகச் சொன்னார். எனக்கும் இதில் பெரிய பிரச்சினை இல்லை. அவருக்கு இதே தலைப்பு வேண்டும் என்றால் நானே விட்டுக் கொடுத்துவிடுகிறேன்.
என்னால் இதுபோல பல தலைப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் எனும்போது எதற்காக வீண் பிரச்சினை?
இனி இதுபோன்ற தலைப்புப் பிரச்சினையே வராத அளவுக்கு, ஒரு புதிய நடைமுறையை தமிழ் சினிமாவில் உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்றார்.