Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ராமேஸ்வரம் கடலில் டிஎம்எஸ் அஸ்தி கரைப்பு!
தமிழ் திரைப்பட உலகின் பிரபல பின்னணி சாதனைப் பாடகர், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட டி.எம்.சவுந்தர்ராஜன் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார்.
காலத்தால் அழிக்க முடியாத குரல் வளத்தை விட்டு சென்றுள்ள டி.எம்.எஸ். உடலுக்கு உலகத்தினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
மதுரையை சேர்ந்த டி.எம்.சவுந்தர்ராஜன் சென்னையில் வசித்தாலும், அவருக்கு மதுரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனி ரசிகர் மன்றமே வைத்துள்ளனர் டிஎம்எஸ்ஸுக்காக.
இந்த ரசிகர்கள் டி.எம்.எஸ். அஸ்தியை ராமேசுவரத்தில் கரைப்பதற்காக மதுரை கொண்டு வந்தனர். இந்த அஸ்தி கலசத்திற்கு பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
நேற்று ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்ட டி.எம்.எஸ். அஸ்தியை அவரது மகன்கள் பால்ராஜ், செல்வகுமார் ஆகியோர் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் அக்னி தீர்த்த கடலில் அஸ்தி கரைக்கப்பட்டது.
அஸ்தி ஊர்வலத்தில் மதுரை சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.