Don't Miss!
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி. நடிகர் ரிதீஷ் குமார் கைது
ராமநாதபுரம் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிதீஷ்குமார். சில படங்களில் நடித்துள்ளார். இவரது தாத்தா சுப.தங்கவேலன் திமுக அமைச்சராக இருந்தவர். இந்த நிலையில் இன்று காலை ரிதீஷ் குமாரை போலீஸார் நிலஅபகரிப்பு வழக்கில் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், தனக்குச் சொந்தமான 1.47 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரிதீஷ்குமார் பறித்துக் கொண்டதாகவும், அதை மீட்டுத் தருமாறும் அவர் கோரியிருந்தார்.
இதன் பேரில்வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரிதீஷ் குமாரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியின்போது யாரும் எதிர்பாராத வகையில் எம்.பி சீட் கொடுக்கப்பட்டு அரசியலில் நுழைக்கப்பட்டார் ரிதீஷ்குமார்.இதனால் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் மேலிடத்தில் தனது தாத்தாவுக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எம்.பியானார் ரிதீஷ்குமார்.
திரைத் துறையிலும் கூட சில காலம் இவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. தனது முதல் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்காக பிரியாணியும், கையில் காசும் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ரிதீஷ்குமார் என்பது நினைவிருக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது பல்வேறு மோதல்களில் ஈடுபட்டு சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார் ரிதீஷ் குமார்.இதுதொடர்பாக சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
நேற்றுதான் மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஆதரவாக ராமநாதபுரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக குரல் கொடுத்தார் ரிதீஷ். இந்த நிலையில் இன்று போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நிலஅபகரிப்பில் ஈடுபட்டவர்களை வளைத்து வளைத்துப் பிடித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திமுகவினர் ஆவர். பல முக்கியத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டனர். சிலர் ஜாமீனில் வெளியே உள்ளனர், பலர் உள்ளேயே இருக்கின்றனர்.
இந்த நிலையில் எம்.பி. ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.