Don't Miss!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி. நடிகர் ரிதீஷ் குமார் கைது
ராமநாதபுரம் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிதீஷ்குமார். சில படங்களில் நடித்துள்ளார். இவரது தாத்தா சுப.தங்கவேலன் திமுக அமைச்சராக இருந்தவர். இந்த நிலையில் இன்று காலை ரிதீஷ் குமாரை போலீஸார் நிலஅபகரிப்பு வழக்கில் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், தனக்குச் சொந்தமான 1.47 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரிதீஷ்குமார் பறித்துக் கொண்டதாகவும், அதை மீட்டுத் தருமாறும் அவர் கோரியிருந்தார்.
இதன் பேரில்வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரிதீஷ் குமாரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியின்போது யாரும் எதிர்பாராத வகையில் எம்.பி சீட் கொடுக்கப்பட்டு அரசியலில் நுழைக்கப்பட்டார் ரிதீஷ்குமார்.இதனால் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் மேலிடத்தில் தனது தாத்தாவுக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எம்.பியானார் ரிதீஷ்குமார்.
திரைத் துறையிலும் கூட சில காலம் இவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. தனது முதல் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்காக பிரியாணியும், கையில் காசும் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ரிதீஷ்குமார் என்பது நினைவிருக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது பல்வேறு மோதல்களில் ஈடுபட்டு சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார் ரிதீஷ் குமார்.இதுதொடர்பாக சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
நேற்றுதான் மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஆதரவாக ராமநாதபுரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக குரல் கொடுத்தார் ரிதீஷ். இந்த நிலையில் இன்று போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நிலஅபகரிப்பில் ஈடுபட்டவர்களை வளைத்து வளைத்துப் பிடித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திமுகவினர் ஆவர். பல முக்கியத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டனர். சிலர் ஜாமீனில் வெளியே உள்ளனர், பலர் உள்ளேயே இருக்கின்றனர்.
இந்த நிலையில் எம்.பி. ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.