Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மாற்றம் எதற்கு தேவை? எல்லாம் நல்லாத் தானே இருக்கு: வாக்களித்த சிம்பு கேள்வி
சென்னை: வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பாட்டு பாடி வீடியோ வெளியிட்ட நடிகர் சிம்பு மாலையில் தான் வாக்களித்துள்ளார்.
சிம்புன்னா சும்மாவே கிசுகிசு எழுதுவாங்க என்று அவரே கூறியுள்ளார். இந்நிலையில் பீப் பாடல் ஒன்றை பாடி தனது பெயரை கெடுத்துக் கொண்ட அவர் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை பாடி வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. நெட்டிசன்கள் சிம்புவை பாராட்டினார்கள். போடு மாமா ஓட்டு அதுக்கு இந்த பாட்டு, ஓட்டு போடுவது நம்மோட கடமை என்று சிம்பு மிகவும் பெறுப்பாக பாடியிருந்தார்.
சிம்புவுக்கு என்னா பொறுப்புணர்ச்சி, தம்பி அருமையா பாடியிருக்குப்பா என்று பெருசுகளும் பாராட்டும்படி நடந்து கொண்டார். இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடந்து கொண்டிருக்கிறது.
திரையுலக பிரபலங்கள் பலர் வாக்களித்துவிட்டனர். ஆனால் வாக்களிக்குமாறு வலியுறுத்திய சிம்பு இன்னும் வாக்களிக்கவில்லையே என்று பலரும் பேசிய நிலையில் மாலையில் தான் அவர் தி.நகர் இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நடிகர், நடிகைகள் எல்லாம் காலையிலேயே வாக்களித்துவிட சிம்புவோ மாலையில் வாக்களித்துள்ளார். எப்படியோ, வாக்களித்தால் சரி தான். சிம்பு வாக்களித்துவிட்டார் ஆனால் தனுஷ் இன்னும் வாக்களிக்கவில்லையே.
வாக்களித்த பிறகு சிம்பு கூறுகையில்,
மாற்றம் எதற்கு தேவை? எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது. நேரம் ஆகிறது சீக்கிரம் வந்து வாக்களியுங்கள் என்றார்.