Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள அனுமதி!
தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஓபனிங் உள்ள சீஸன் என்றால் அது பொங்கல் திருவிழா காலம்தான். கிட்டத்தட்ட ஒரு வார காலத்துக்கு புதுப் படங்கள் பார்க்க மக்கள் அலை மோதுவார்கள். இந்த நாட்களில் கூடுதல் காட்சிகள் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13,17,18,19 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி, (அதாவது 5 காட்சிகள்) நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
மேலும் பொங்கல் விடுமுறை நாட்களான 14,15,16 ஆகிய தேதிகளில் ஏற்கனவே உள்ள அரசாணையின்படி, காலை 9 மணிக்கு கூடுதலாக ஒரு காட்சியை நடத்திக்கொள்ளலாம்.
டூரிங் தியேட்டர்கள் எனும் நடமாடும் திரையரங்குகள் 14,15,16 தேதிகளில் காலைக் காட்சிகளை 9 மணிக்கு நடத்திக் கொள்ளலாம். 13, 17, 18, 19 தேதிகளில் மேட்னி காட்சியை 2.30 மணிக்கு நடத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகப்படியான காட்சிகள் திரையிடுவது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், கேளிக்கை வரி அதிகாரிகளிடமும் தெரிவித்துவிட்டு நடத்திக் கொள்ளுமாறு அந்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.