Don't Miss!
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அண்டார்டிகா ஆய்வுக்கு புதிய இந்திய கப்பல்
சென்னை: பல்நோக்கு அறிவியல் கப்பலான சாகர்நிதியை, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அண்டார்க்டிக் மற்றும் ஆர்க்டிக் பிரதேசங்களில் இந்தியா மேற்கொள்ளவுள்ள ஆய்வுத் திட்டங்களுக்கு இந்தக் கப்பல் பேருதவியாக இருக்கும்.
இந்தக் கப்பலில் மொத்தம் 40 விஞ்ஞானிகள் இருப்பார்கள். 100 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 5 மீட்டர் ஆழம் கொண்டதாக இந்த கப்பல் இருக்கும். மணிக்கு 10 முதல் 20 கடல் மைல்கள் தொலைவுக்கு இக்கப்பல் செல்லும்.
ஆழ் கடல் அகழ்வுப் பணிகள், கடலியல் ஆய்வுகள், கடலியல் தொழில்நுட்பப் பணிகள் உள்ளிட்டவற்றில் இந்தக் கப்பல் விஞ்ஞானிகளுக்கு உதவும்.
ரிமோட் கன்ட்ரோல் கருவிகள், ஹைட்ராலிக் லிப்டுகள், 10 டன் எடை கொண்ட கிரேன்கள் உள்ளிட்ட பல்வேறு அதி நவீன வசதிகள் இந்தக் கப்பலில் இடம் பெற்றுள்ளது.
இதுதவிர ஹெலிபேட், அறிவியல் வேன்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவையும் இதில் இடம் பெற்றுள்ளன.