Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினி, கமல் அரசியல்: சத்யராஜுக்கு பார்த்திபன் குண்டக்க மண்டக்க பதில்
Recommended Video
சென்னை: பிரபல நடிகர்களுக்கு அனைத்தும் தெரியும் என நம்ப வேண்டாம் என்று சத்யராஜ் தெரிவித்துள்ள நிலையில் பார்த்திபனோ ரஜினி, கமலை நம்பலாம் என்கிறார்.
நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும். பிரபல நடிகர்கள் என்பதால் அவர்களுக்கு அனைத்தும் தெரியும் என்று மட்டும் நம்ப வேண்டாம் என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார். அவர் ரஜினி, கமலை பற்றி தான் அப்படி பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கமல்
ரஜினியும், கமலும் சந்தித்து பேசியுள்ளது அவர்களின் ஆரோக்கியமான அரசியலை காட்டுகிறது. அவர்களை சினிமாக்காரர்கள் தானே என்று யாரும் ஒதுக்கிவிடக் கூடாது.
மக்கள்
ரஜினி, கமல் நடித்து சம்பாதித்து சேர்த்து வைத்துள்ள பணம் எல்லாம் மக்கள் கொடுத்தது. அந்த பணத்தை மக்களுக்கு நல்லது செய்ய பயன்டுத்த விரும்புகிறார்கள்.
ஓட்டு
ரஜினி, கமலை நம்பலாம். அதற்காக அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். தேர்தல் வரும் நேரத்தில் தான் யாருக்கு என் ஆதரவு என்பதை தெரிவிப்பேன்.
காவிரி
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரின் அளவை குறைத்துவிட்டனர். மனிதாபிமானத்தோடு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுங்கள் என்று கர்நாடகாவை மன்றாடுகிறேன். தமிழக மக்கள் உங்களுக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்றார் பார்த்திபன்.