Just In
- 36 min ago
அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
- 56 min ago
காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!
- 1 hr ago
கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing
- 1 hr ago
லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
வேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.!
- Sports
ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்?
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- Finance
4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தீபாவளிக்கு 5 ஷோ- தியேட்டர்களுக்கு அனுமதி- கட்டணக் கொள்ளை தடுக்கப்படுமா?

எந்தப் புதிய படம் வந்தாலும் சரி, குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தால் போதும், தியேட்டர்களில் கட்டணக் கொள்ளை கொடி கட்டிப் பறக்கும். சாதாரண நாட்களிலும் கூட தியேட்டர்களுக்கு சாமானிய மக்கள் குடும்பத்தோடு போய் பார்க்க முடியாத நிலை உள்ளது (படங்கள் மட்டுமல்ல, தியேட்டர் கட்டணமும் அவ்வளவு லட்சணத்தில் உள்ளது). இதனால்தான் திருட்டு டிவிடி உள்ளிட்டவை பெருத்துப் போயுள்ளன.
தியேட்டர்களில் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியையும் செய்து தராமல் கட்டணத்தை மட்டும் தாறுமாறாக உயர்த்திக் கொள்ளையடிக்கும் தியேட்டர்கள் நிறையவே உள்ளன. திண்பண்டம் எடுத்து வரக் கூடாது என்று மக்களிடம் கூறும் தியேட்டர்கள் உள்ளே விற்பதைத்தான் திண்ண வேண்டும் என்று மக்கள் கழுத்தில் கத்தியை வைக்காத குறையாக கூறுகின்றன. உள்ளே விற்கும் திண்பண்டங்களோ, ராக்கெட் விலையை தாங்கி மக்களை பதைபதைக்கவும், வயிறு எறியவும் செய்கின்றன.
இந்த நிலையில் தீபாவளி வந்து விட்டது. கட்டணக் கொள்ளையும் தொடங்கப் போகிறது. இந்தப் பின்னணியில் தீபாவளிக்கு ஐந்து காட்சிகள் வரை நடத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தொன்றுதொட்டு வரும் பல பழக்கவழக்கங்களில் ஒன்று, தீபாவளியன்று ஒரு சினிமாவை பார்த்து மகிழ வேண்டும் என்பது. அப்படி விரும்புபவர்கள் எளிதாக சினிமா பார்ப்பதற்காக கூடுதல் காலை காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.
அந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா, தீபாவளி பண்டிகை முதல் 7 நாட்களுக்கு (26-ந் தேதி முதல் 1-11-2011 வரை) அனைத்து திரையரங்குகளிலும் கூடுதல் காலை காட்சி நடத்த அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அதற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதேபோல தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஒரு அறிக்கை விடுத்துள்ளனர். அதில்,
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகள் 5 காட்சிகள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது வருகிற 27, 28, 31 மற்றும் 1-11-2011 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
26, 29, 30 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறையானதால், அந்த நாட்களிலும் அதிகப்படியாக ஒரு காட்சி, அதாவது 5 காட்சிகள் நடத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
அப்படியே மக்களைப் பாதிக்காத வகையில் கட்டணங்களை குறைவாக வசூலிக்கவும் அரசு கண்டிப்பான நடவடிக்கை எடுத்தால் மக்கள் முழு சந்தோஷத்தோடு தியேட்டர்களுக்குப் படையெடுத்து வருவார்கள்.