Don't Miss!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக சித்ராவை எத்தனை நாளைக்கு பார்க்க முடியும்? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா நடித்த கடைசி எபிசோட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாமியே சரணம் ஐயப்பா.. ஈஸ்வரன் படம் வெற்றி பெற மலையேறும் சிம்பு!
சித்ரா மரணமடைந்து இன்றோடு 15 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அவரது மரணத்தில் உள்ள மர்மம் மட்டும் இன்னும் விலகவில்லை.
சித்ரா கணவர் கைது
சித்ரா நடத்தையில் அவரது கணவரான ஹேமந்துக்கு ஏற்பட்ட சந்தேகம் தான் சித்ராவை தற்கொலை செய்து கொள்ள தூண்டியுள்ளது என விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஹேமந்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனனர் போலீசார்.
சித்ராவின் முன்னாள் காதலர்கள்
ஆனால் சித்ராவின் மாமனார் தனது மகன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். யாரை காப்பாற்ற தனது மகனை கைது செய்துள்ளார்கள் என்று கூறிய அவர், சித்ராவின் தற்கொலைக்கு அவரது முன்னாள் காதலர்களே காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
இதனால் சித்ராவின் மரண வழக்கு சூடு பிடித்துள்ளது. இதனிடையே சித்ரா நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சித்ரா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோரஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
இனி யார் சித்ரா?
இதில் நடிகர் குமரனுக்கு ஜோடியாக நடித்தார் சித்ரா. அந்த ஜோடிக்காகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பார்த்தவர்கள் பலர். இந்நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
முல்லையாக வாழ்ந்த சித்து
சித்ரா அந்த சீரியலில் முல்லையாகவே வாழ்ந்திருந்தார் என்பதால் இனி அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றனர். இதையடுத்து நடிகை சரண்யா முல்லையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை மறுத்தார் சரண்யா.
இன்ஸ்டாவில் தகவல்
அதேபோல் சீரியல் நடிகை ஜனனியும் தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று கூறினார். இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடித்து வரும் ஹேமாராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி முல்லையாக நடிக்கப்போவது இவரா என்று பதிவிட்டு ஒரு யூடியூப் வீடியோவை ஷேர் செய்திருந்தார்.
காவ்யாதான் முல்லை
அதில் பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை காவ்யா இனி முல்லையாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனால் காவ்யா தான் இனி முல்லையாக நடிக்கவுள்ளார் என்று தெரியவந்தது.
இன்றுடன் நிறைவு
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சித்ரா முல்லையாக நடித்த காட்சிகள் அனைத்தும் டிசம்பர் 23ஆம் தேதி அதாவது இன்றுடன் நிறைவடைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் பார்க்க முடியாது
இதன்பிறகு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக சித்ராவை ரசிகர்கள் பார்க்க முடியாது. இது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் நடிகை சித்ரா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.