Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாவ் செம.. 65 பாடகர்கள்.. 5 தேசிய மொழிகள்.. வெளியானது ஏ.ஆர். ரஹ்மானின் சுதந்திர தின பரிசு!
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏ.ஆர். ரஹ்மானின் சிறப்பு பரிசு வெளியாகி உள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ரோஜா படத்திற்கு இசையமைத்த "தமிழா தமிழா" பாடலை 65 பாடகர்கள், 5 இந்திய தேசிய மொழிகளில் பாடி தொகுக்கப்பட்டு தற்போது சுதந்திர தின பரிசாக வெளியாகி இருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடங்கி, ஹரிஹரன் வரை இந்த பாடலை பாடியுள்ளனர்.
மேலும், பல்வேறு சூப்பர் ஹிட் தமிழ் பாடல்களை பாடிய 65 பாடகர்கள் இணைந்து இந்த பாடலை பாடியும் அதனை வீடியோவாக பதிவு செய்தும், அனைத்தையும் ஒன்று சேர்த்து எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான், கே.ஜி.எஃப் ஹீரோ யஷ் முதல் பல பிரபலங்கள் இந்த பாடலை ரிலீஸ் செய்துள்ளனர்.
ஸ்ரீநிவாஸ், ராகுல் நம்பியார் மற்றும் ஆலப் ராஜா இந்த பாடலை ஒருங்கமைத்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து!
#TogetherAsOne எனும் ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வரும் இந்த பாடல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி உள்ளது.
Recommended Video
பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸின் யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு, இந்த லாக்டவுனில் வறுமையால் வாடி தவிக்கும் பின்னணி பாடகர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் இந்த பாடலை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.