Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'ஐ ஆம் வெயிட்டிங்'... ரசிகர்களைக் கவர்ந்த டாப் 5 இடைவேளைக் காட்சிகள்
சென்னை: படங்களைப் பொறுத்தவரையில் இடைவேளை 'ட்விஸ்ட்டுடன்' இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
மேலும் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு படத்தின் இடைவேளை தான் அப்படத்தைத் தொடர்ந்து பார்க்கலாமா? இல்லையா? என்பதைத் தீர்மானம் செய்கிறது.
அந்தவகையில் மிக சுவாரஸ்யமான இடைவேளைக் காட்சிகள் கொண்ட 5 படங்களை இங்கே பார்க்கலாம்.
துப்பாக்கி
விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் 2012 ம் ஆண்டு வெளியான படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் விஜய்க்கு முதல் 100 கோடிப் படமாக அமைந்தது. இப்படத்தின் இடைவேளைக் காட்சியானது விஜய் 'ஐ ஆம் வெயிட்டிங்' என்று வில்லனிடம் கூறுவது போல அமைந்திருக்கும். இன்றுவரை ரசிகர்களின் மனங்கவர்ந்த இடைவேளைக் காட்சியாக இப்படம் உள்ளது.
மங்காத்தா
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011 ம் ஆண்டு வெளியான படம் 'மங்காத்தா'. இப்படத்தில் தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோயிசங்களையும் உடைத்து அஜீத் நடித்திருந்தார். 50 வது படமென்றாலும் 4 இளம் நடிகர்களுடன் இணைந்து அஜீத் நடித்தது தமிழ்த் திரையுலகில் ஆச்சரியங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக இப்படத்தின் இடைவேளையில் அஜீத் சிரிக்கும் காட்சி ரசிகர்களை இப்படத்துடன் ஒன்றிப் போக வைத்தது.
மாயா
சமீபகாலமாக வெளியான பேய்ப்படங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த படமாக 'மாயா' திகழ்கிறது. அழகுப்பதுமையான நயன்தாரா அறிமுக இயக்குநரின் படத்தில் நடித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இடைவேளைக்குப் பின்தான் கதை ஆரம்பம் என்றாலும், முதல் பாதியில் வரிசையாக நிகழும் கொலைகள் இடைவேளைக்குப்பின் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
தனி ஒருவன்
கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களில் தனி ஒருவனுக்கு தனியான இடமுண்டு. ஹீரோ ஜெயம் ரவிக்கு சமமாக அரவிந்த் சாமி வில்லத்தனம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். குறிப்பாக வில்லனின் கை ஓங்குவது போல இப்படத்தின் இடைவேளை அமைய ரசிகர்கள் 2 வது பாதியை ஆவலுடன் காத்திருந்தனர்.
தெறி
இந்த வரிசையில் கடந்த வாரம் வெளியான 'தெறி' படத்தின் இடைவேளைக் காட்சியும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இப்படத்தின் இடைவேளையில் நைனிகாவைத் தூக்கிக்கொண்டு விஜய் வாயில் விரல் வைத்து 'உஷ்' என்பார். 'துப்பாக்கி' படத்திற்குப் பின் 'தெறி' இடைவேளை தங்களைக் கவர்ந்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.