Don't Miss!
- News
கலெக்டரை மாத்துங்க.. பணப் பட்டுவாடா ஜரூர்.. அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக தேமுதிக புகார்!
- Technology
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Sports
ரோகித்திற்கு பெரிய சம்பவம் இருக்கு.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் பயிற்சியாளர் சுவாரஸ்ய தகவல்!
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கொரோனா காலத்துலயும் சிறப்பான ஓபனிங்... முதல் 5 இடங்களை பிடித்த படங்கள்!
சென்னை : கொரோனா காலத்தில் திரையரங்குகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி மற்றும் திரையரங்குகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை திரையரங்குகள் சந்தித்தன. இந்த சூழலிலும் தமிழகத்தில் வெளியான படங்கள் சிறப்பான வசூலை பெற்றுள்ளன.

கொரோனா பாதிப்பு
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். ஏராளமானோர், தங்களது உயிரை இழந்துள்ள நிலையில், தங்களது விருப்பத்திற்குரியவர்களை மட்டுமின்றி வாழ்வாதாரங்களை இழந்தும் மக்கள் வாடினர்.

கட்டுக்குள் வந்த கொரோனா பாதிப்பு
தற்போது நிலைமை ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் முந்தைய காலகட்டங்களின் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூழலில் அதை எதிர்கொள்ளும்வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அரசு முதலில் கைவைத்தது கேளிக்கைகளில்தான்.

குறைந்த ரசிகர்கள்
திரையரங்குகள் 100 சதவிகிதம் மூடப்பட்ட நிலையும் இருந்தது. 50 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட சூழலும் காணப்பட்டது. இத்தகைய காரணங்களால் திரையரங்குகளில் சென்று படங்களை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. மக்கள் தற்போது ஏராளமான எண்ணிக்கைகளில் ஓடிடியில் படங்களை பார்த்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் சிறப்பான ஓபனிங்
கொரோனா பாதிப்பு, ஊரடங்கு, திரையரங்குகள் மூடல், 50 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி என்று பல்வேறு சூழல்களிலும் திரையரங்குகளில் சென்று படங்களை பார்த்தனர் ரசிகர்கள். அந்தவகையில் கொரோனா சூழலில் திரையரங்குகளில் சிறப்பான ஓபனிங்கை பெற்ற படங்களில் முதல் 5 இடங்களில் உள்ள படங்களை பார்க்கலாம்.

முதலிடத்தில் வலிமை
அஜித்தின் வலிமை படம் அந்த வகையில் சிறப்பான வசூலை எட்டியுள்ள முதல் படமாக உள்ளது. இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் விஜய்யின் மாஸ்டர் படம் இடம்பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் ரஜினியின் அண்ணாத்த படமும், நான்காவது இடத்தில் தனுஷின் கர்ணன் படமும் இடம்பெற்றுள்ளது.

5வது இடத்தில் ஆர்ஆர்ஆர்
தற்போது வெளியாகியுள்ள ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் இந்த வரிசையில் 5வது இடத்தை பெற்றுள்ளது. மற்ற நான்கு படங்களும் நேரடி தமிழ் படங்களாக உள்ள நிலையில், ஆர்ஆர்ஆர் படம் டப்பிங் படமாக இருந்தாலும் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து ராஜமௌலியின் மேஜிக்கில் இந்தப் படத்தில் ஜொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.