சைந்தவிக்கு பொம்மையை கொடுத்து காதல் வளர்த்தேன்: ஜி.வி.
சென்னை: இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், பாடகி சைந்தவியை வரும் ஜூனில் மணக்க உள்ளார். இந்நிலையில், டெடிபியர் பொம்மையை கொடுத்து காதலியை கவர்ந்ததாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
'வெயில்', 'குசேலன்', 'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்து பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ். தனது இசையில் பாட வந்த பாடகி சைந்தவியை காதலிப்பதாகத் தான் முதலில் செய்தி பரவியது. ஆனால் 12 வருடமாக இவர்கள் காதலித்து வருகிறார்களாம். இவர்கள் திருமணம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது.
சைந்தவியை காதலித்த அனுபவம் பற்றி பிரகாஷ் கூறியதாவது:
அப்போ நா 10வது... சைந்தவி 8வது
நான் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் சைந்தவி 8 வகுப்பு படித்து வந்தார். அப்போதே அவர் மீது எனக்கு காதல் பிறந்துவிட்டது. எனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினேன்.

காதல் வளர்த்தேன்...
டெடிபியர் கரடிபொம்மை இரண்டை அவருக்கு பரிசளித்தேன். அதை தொட்டால் உடனே 'ஐ லவ் யூ' என்று சொல்லும். இப்படித்தான் எனது காதலை தெரிவித்தேன். அவருக்கும் என்னை பிடித்திருந்தது.
இப்போ, லைப்ல செட்டில் ஆகிட்டோம்...
அடிக்கடி எனக்கு போன் செய்வார். மனம் விட்டு பேசி காதலர்களாக ஆனோம். கடந்த 12 வருடமாக எங்கள் காதல் வளர்ந்துவந்தது. வாழ்க்கையில் நிலையான ஒரு இடத்தை பிடித்தபிறகே திருமணம் செய்ய முடிவு செய்தோம்.
வயசாகுதுல...
இப்போது எல்லோருக்கும் தெரிந்த ஒரு இசை அமைப்பாளராக நான் இருக்கிறேன். சைந்தவி பாடகியாக இருக்கிறார். திருமணத்துகான வயதும் வந்துவிட்டது. எனவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கூறினார்.


Click it and Unblock the Notifications











