இதெல்லாம் நடந்திடும்னு பயமா இருக்கு: அ.உ. சூப்பர் ஸ்டார் பட இயக்குனர் ட்வீட்
Recommended Video

சென்னை: தமிழ் படத்தின் இரண்டாம் பாகமான தமிழ் படம் 2.0-ன் சிங்கிள் வெளியிடப்படுவதை கூட இயக்குனர் வித்தியாசமாக அறிவித்துள்ளார்.
சி. எஸ். அமுன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்த தமிழ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். இரண்டாம் பாகத்திற்கு தமிழ் படம் 2.0 என்று பெயர் வைத்துள்ளனர்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தெறிக்க விட்டார் அமுதன்.

அரசியல்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவா கண்ணை மூடி தியானம் செய்தது போன்று இருந்தார். அதை பார்த்த உடனேயே அவர்கள் யாரை கலாய்க்கிறார்கள் என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது.

சீக்கிரம்
போஸ்டரிலேயே இந்த கலாய் கலாய்க்கிறாங்களே, படத்தில் எப்படி எல்லாம் வச்சு செஞ்சிருப்பாங்களோ, இப்பவே பார்க்கணும் போல இருக்கிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

வியாழக்கிழமை
தமிழ் படம் 2.0-ன் சிங்கிள் நாளை காலை 9 மணிக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது. அதை நடிகர் மாதவன் வெளியிடுகிறார். அந்த ரிலீஸ் குறித்து இயக்குனர் ட்விட்டரில் வித்தியாசமாக அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு கண்ணன் இசையமைத்துள்ளார்.
ட்வீட்
சிங்கிள் ரிலீஸ் குறித்து அமுதன் ட்வீட்டியிருப்பதாவது, இந்தியா லெவல்ல டிரெண்ட் ஆகணும்னு நினைக்கல, பெருசா வைரலா போகும்னு எதிர்பார்க்கல ஆனா இதெல்லாம் நடந்திடும்னு பயமா இருக்கு, டிபி 2.0 சிங்கிளை நாளை காலை 9 மணிக்கு மாதவன் வெளியிடுகிறார்.


Click it and Unblock the Notifications











