Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சமந்தாவால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி
சென்னை:நடிகை சமந்தாவால் செங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையை அடுத்து உள்ள செங்குன்றத்தில் ஜி.என்.டி. சாலையில் கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்தை நடிகை சமந்தா திறந்து வைத்தார். இந்த வணிக வளாக திறப்பு விழாவில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ப்ரியங்காவும் கலந்து கொண்டார்.
சமந்தா வரும் தகவல் அறிந்து ரசிகர்களும், பொது மக்களும் அந்த வணிக வளாகம் முன்பு கூடிவிட்டனர்.
கார்
காரில் இருந்து சமந்தா இறங்கியதும் அவருடன் செல்ஃபி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் ரசிகர்கள் முந்தியடித்தனர். அவருக்கு பாதுகாப்பாக வந்த தனியார் பாதுகாவலர்களும், போலீசாரும் ரசிகர்களை தடுத்தனர்.
தள்ளுமுள்ளு
எங்க சமந்தாவுடன் நாங்க செல்ஃபி எடுக்கக் கூடாதா என்று ரசிகர்கள் முந்தியடித்ததால் போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை
பாதுகாப்பு பணிக்கு குறைந்த அளவே போலீசார் வந்திருந்ததாால் அவர்கள் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு
சமந்தாவை பார்க்க கூட்டம் கூடியதால் ஜி.என்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் எரிச்சல் அடைந்தனர்.