Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இளையராஜா குரலில் அஞ்சலி செலுத்திய வர்ஷன்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் பாடல் என்ற பெயரில் ஒரு பாடல் வலையுலகில் உலா வருகிறது.
நிறையப் பேர் இந்தப் பாடலைப் பாடியவர் இளையராஜா என்றுதான் நினைத்துவிட்டார்கள். அப்படியே செய்தி பரப்பியும் வந்தனர்.
ஆனால் இப்போதுதான் அந்தப் பாடலைப் பாடியவர் யார், இசையமைத்தது யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
'அம்மா...' எனத் தொடங்கும் அந்தப் பாடலை இசையமைத்துப் பாடியிருப்பவர் வர்ஷன். இவர் ஒரு வளரும் இசைக் கலைஞர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'புறம்போக்கு' படத்திற்கு இசையமைத்தவர். பாடலை எழுதியிருப்பவர் வளரும் பாடலாசிரியர் அஸ்மின். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சமர்ப்பணம் செய்து தமிழ் சினிமா கலைஞர்களால் வெளியிடப்படும் முதல் இரங்கல் பாடல் இது.
இந்த பாடல் பாடிய வர்ஷனின் குரல், அச்சு அசல் இளையராஜா குரல் போல் இருப்பதால் இளையராஜா தான் இந்த பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார் என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.