Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இளையராஜா குரலில் அஞ்சலி செலுத்திய வர்ஷன்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் பாடல் என்ற பெயரில் ஒரு பாடல் வலையுலகில் உலா வருகிறது.
நிறையப் பேர் இந்தப் பாடலைப் பாடியவர் இளையராஜா என்றுதான் நினைத்துவிட்டார்கள். அப்படியே செய்தி பரப்பியும் வந்தனர்.
ஆனால் இப்போதுதான் அந்தப் பாடலைப் பாடியவர் யார், இசையமைத்தது யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
'அம்மா...' எனத் தொடங்கும் அந்தப் பாடலை இசையமைத்துப் பாடியிருப்பவர் வர்ஷன். இவர் ஒரு வளரும் இசைக் கலைஞர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'புறம்போக்கு' படத்திற்கு இசையமைத்தவர். பாடலை எழுதியிருப்பவர் வளரும் பாடலாசிரியர் அஸ்மின். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சமர்ப்பணம் செய்து தமிழ் சினிமா கலைஞர்களால் வெளியிடப்படும் முதல் இரங்கல் பாடல் இது.
இந்த பாடல் பாடிய வர்ஷனின் குரல், அச்சு அசல் இளையராஜா குரல் போல் இருப்பதால் இளையராஜா தான் இந்த பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார் என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.