Don't Miss!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மீரா மிதுனோட சாயம் வெளுத்துப் போச்சு பாஸ்.. இப்போ அவர் இடத்துல யாரு இருக்காங்க தெரியுமா?
ஊழல் தடுப்பு ஆணையத்தின் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை மீரா மிதுனின் இடத்திற்கு திருச்சியை சேர்ந்த மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: ஊழல் தடுப்பு ஆணையத்தின் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை மீரா மிதுனின் இடத்திற்கு புதிய நபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். பிக் பாஸ் மூலம் பிரபலமானாலும், அதை அவரால் தமிழ் சினிமாவில் அறுவடை செய்ய முடியவில்லை. பல படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி மும்பையில் செட்டிலானார். பாலிவுட்டில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிடலாம் என நினைத்தார்.
மலைப்பாம்பு வைத்துள்ளதாக வெளியான செய்தி.. நடிகர் அஜித் வீட்டில் வனத்துறை திடீர் சோதனை.. பரபரப்பு!
மீராவின் அதிரடி
திடீரென தமிழகம் வந்து தான் அரசியலில் இறங்கி நாட்டை சுத்தம் செய்யப் போவதாக அறிவித்தார். அதற்கு முதல் படியாக, மத்திய அரசின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராகத் தான் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அனைவரையும் அதிர வைத்தார். அதற்கு சான்றாக அந்த ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையையும் காட்டினார்.
மீரா நீக்கம்
ஆனால், சில மாதங்களிலேயே அந்தப் பதவியில் இருந்து மீராவை அதிரடியாக நீக்கியது ஊழல் தடுப்பு ஆணையம். மீராவுக்கு குற்றப் பின்னணி இருப்பதே அதற்கு காரணம் என கூறப்பட்டது. பல மோசடி வழக்குகளில் மீரா மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதற்கான காவல்துறை விடுவிப்பு சான்றிதழை மீரா சமர்ப்பிக்கவில்லை என்பதாலேயே இந்த நடவடிக்கை.
மீரா மறுப்பு
ஆனால் ஊழல் தடுப்பு ஆணையம் தனது பதவியை பறிக்கவில்லை என்றும், அதுதொடர்பாக தனக்கு எந்த கடிதமும் வரவில்லை என்றும் மீரா மறுப்பு கூறியிருந்தார். மேலும், யாரோ சிலர் திட்டமிட்டு தனக்கு எதிராக வதந்தி பரப்புவதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
திருச்சி டாக்டர்
இந்நிலையில் மீரா மிதுனுக்கு பதிலாக திருச்சியைச் சேர்ந்த பிரபல டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் என்பவர் தற்போது அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை ஊழல் தடுப்பு ஆணையம் அவருக்கு அனுப்பியுள்ளது. ஆனால் அந்த பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.