திரிஷா படத்துக்கு சிக்கல்!
இதனால் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விலங்குகளை வைத்துப் படம்எடுத்தால், பிராணிகள் நல வாரியத்திடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெறவேண்டும்.
தமிழில் ஷங்கர் தயாரித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திற்கும் இந்த சிக்கல்எழுந்தது. இதையடுத்து முதல்வர் கருணாநிதியை ஷங்கர், நடிகர் வடிவேலு,இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் சந்தித்து இந்த விவகாரத்தில் உதவ வேண்டும்என்று கோரினர்.
சம்பந்தப்பட்ட பிராணிகள் நல வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைஅமைச்சகத்தின் கீழ் வருகிறது. இந்தத் துறைக்கு திமுகவைச் சேர்ந்த ராஜாதான்அமைச்சராக உள்ளார்.
அவர்களும் வழங்கவே இப்போது இந்தப் படங்களுக்கு தடை நீங்கியுள்ளது. இந்தநிலையில் ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்படத்திற்கும் இதே சிக்கல் எழுந்துள்ளது. இப்படத்தில் நாய், ஆடு, பசு, குதிரைஉள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதால், பிராணிகள் நல வாரியத்தின் சான்றிதழ் பெறவேண்டும் என்று தணிக்கைக் குழு கூறி விட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் இதுதொடர்பாக தணிக்கைக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications