Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
சென்னை: ஐதராபாத்தில் நடக்கும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளார்.
கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம்.
செண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்!
தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட சில மொழிகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசை
இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
ஆதித்த கரிகாலன்
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறார். சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் நடிக்கின்றனர். சின்ன பழுவேட்டைரையராக ரகுமான், ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கின்றனர்.
அருள்மொழி வர்மன்
குந்தவை பிராட்டியாக த்ரிஷா, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. அங்கு ஜெயம் ரவியின் ஓபனிங் காட்சிகள் படமாக்கப்பட்டன.
கொரோனா பரவல்
இதையடுத்து ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. அங்கு ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.
ஷூட்டிங்கில் த்ரிஷா
கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய், இந்த மாதத் தொடக்கத்தில் ஐதராபாத் வந்திருந்தார். இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் இதன் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். அவர் கையில் பொன்னியின் செல்வன் நாவலை வாசிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
குதிரையேற்றப் பயிற்சி
சில நாட்களுக்கு முன் குதிரையேற்ற பயிற்சி பெற்றார். குதிரையுடன் இருக்கும் புகைப் படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார் என்பது குறுப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இந்தாண்டு அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும்
படங்களில் இந்தப் படமும் ஒன்று.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!