மகத்தை மோகன்பாபு மகன் அடித்ததற்கு திரிஷா, லட்சுமி ராயே சாட்சி?

மகத் - மனோஜ் மஞ்சு அடிதடி விவகாரத்தில் பெரும் பெரும் புள்ளிகள் தலையிட்டு மனோஜ் மஞ்சுவைக் காப்பாற்ற கடுமையாக முயன்று வருகின்றனராம். இதனால் போலீஸாரின் விசாரணைக்குப் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் விடாமல் போலீஸ் தரப்பில் மனோஜைப் பிடித்துக் கைது செய்ய மும்முரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது நடிகைகள் திரிஷா, லட்சுமி ராய் ஆகியோர் முன்னிலையில்தான் மகத்தை மனோஜும், அவரது நண்பர்களும் சகட்டுமேனிக்குத் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை திரிஷாவும், லட்சுமி ராயும் நேரில் பார்த்தனர் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த இரு நடிகைகளும் தாக்குதலை நேரில் பார்த்தது உண்மையாக இருந்தால் அவர்களையும் பிடித்து விசாரிக்க போலீஸ் தரப்பு மும்முரமாக உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











