Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
த்ரிஷாவா? நயன்தாராவா ?...சிம்புவுடன் அடுத்து ஜோடி சேர போவது யார் ?
சென்னை : பல சர்ச்சைகள், பிரச்னைகளுக்கு பிறகு சிலம்பரசன் தற்போது மீண்டும் நடிக்க துவங்கி உள்ளார். தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டு, பல்வேறு டைரக்டர்களுக்கும் அவர் செய்து கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிறகு, சில படங்களில் பாடல்களும் பாடி வருகிறார்.
காதலர் தினத்துக்கான சரியான கிஃப்ட்.. பிரபாஸ், பூஜா ஹெக்டேவின் ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்நிலையில் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் 3 வது முறையாக கை கோர்க்க சிம்பு ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதற்கு முன் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் சிம்பு - கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
த்ரிஷாவா – நயன்தாராவா
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க போகும் புதிய படத்தில் அவருடன் ஜோடி சேர போவது த்ரிஷாவா அல்லது நயன்தாராவா என்பது தான் லேட்டஸ்ட் டாக். நயன்தாராவை தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
மீண்டும் ஜோடி சேர்க்க முயற்சி
சிம்பு - நயன்தாரா இடையேயான காதல் முறிவுக்கு பிறகு அவர்கள் இருவரும், பாண்டியராஜ் இயக்கிய, இது நம்ம ஆளு படத்தில் மட்டும் தான் சேர்ந்து நடித்தனர். அதற்கு பிறகு இருவரும் நடிக்கவில்லை. அதனால் தான் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா
ஆனால் ஏற்கவே கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா நடித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் நயன்தாரா இந்த வாய்ப்பை ஏற்க மறுத்தால், த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது வித்தியாசமான படம்
படத்தின் பணிகள் துவங்குவதற்கு முன் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தனது முந்தைய படங்களைப் போல் இந்த படம் இருக்காது என கவுதம் மேனன் ஏற்கனவே கூறி விட்டார்.
இப்போதைக்கு இல்லை
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ள இப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது நடித்து வரும் மாநாடு படத்திற்கு பிறகு பத்து தல படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இதனால் கவுதம் மேனன் உடனான படத்தின் வேலைகள் துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.