Don't Miss!
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாயகியால் பேயாட்டம் கண்ட மோகினி
சென்னை: த்ரிஷா நடிப்பில் வெளியான நாயகி படம் ஊத்திக் கொண்டதால் மோகினி படம் கைவிடப்பட்டுள்ளதாம்.
நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் அடுத்ததாக த்ரிஷா நாயகி என்ற படம் மூலம் சோலோ நாயகியாகவும், பாடகியாகவும் தன்னை மெருகேற்றினார். அதன் விளைவாக அவருக்கு மோகினி என்ற படமும் கிடைத்து படப்பிடிப்பும் லண்டனில் தொடங்கி சில நாட்கள் முன் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம்வந்தது.
ஜூலை 15-ம் தேதி ஆந்திராவில் நாயகி திரைப்படம் வெளியான வேகத்தில், ஸ்பீட் பிரேக் போட்டு தத்தி தவழ்ந்தது. ஆந்திராவில் நாயகி அவுட் ஆனது த்ரிஷா மற்றும் நாயகி படக்குழுவிற்கு மட்டும் அதிர்ச்சி இல்லை. மோகினி திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த மாதேஷுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.
பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தான் மோகினி திரைப்படத்தினை தயாரிக்கிறார். அவர் இயக்குனர் மாதேஷுடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பாக மோகினி திரைப்படத்தை எடுத்துவிடலாம் என்று இப்படத்தில் களம் இறங்கியுள்ளனர். ஆனால், நாயகியின் பல்டி தயாரிப்பாளரை பல்டி அடிக்க வைத்துவிட்டது.
இதனால், இருபது நாட்கள் மட்டுமே நடந்த மோகினி திரைப்படத்தை நிறுத்த சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர். இதையடுத்து இயக்குனர் மாதேஷும் தற்போது படப்பிடிப்பை நிறுத்தி கிடப்பில் போட்டுவிட்டாராம். இதனால் கடுப்பான த்ரிஷா கூல் ஆக வெளிநாட்டிற்கு சென்றுள்ளாராம்.