Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாயகியால் பேயாட்டம் கண்ட மோகினி
சென்னை: த்ரிஷா நடிப்பில் வெளியான நாயகி படம் ஊத்திக் கொண்டதால் மோகினி படம் கைவிடப்பட்டுள்ளதாம்.
நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் அடுத்ததாக த்ரிஷா நாயகி என்ற படம் மூலம் சோலோ நாயகியாகவும், பாடகியாகவும் தன்னை மெருகேற்றினார். அதன் விளைவாக அவருக்கு மோகினி என்ற படமும் கிடைத்து படப்பிடிப்பும் லண்டனில் தொடங்கி சில நாட்கள் முன் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம்வந்தது.
ஜூலை 15-ம் தேதி ஆந்திராவில் நாயகி திரைப்படம் வெளியான வேகத்தில், ஸ்பீட் பிரேக் போட்டு தத்தி தவழ்ந்தது. ஆந்திராவில் நாயகி அவுட் ஆனது த்ரிஷா மற்றும் நாயகி படக்குழுவிற்கு மட்டும் அதிர்ச்சி இல்லை. மோகினி திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த மாதேஷுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.
பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தான் மோகினி திரைப்படத்தினை தயாரிக்கிறார். அவர் இயக்குனர் மாதேஷுடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பாக மோகினி திரைப்படத்தை எடுத்துவிடலாம் என்று இப்படத்தில் களம் இறங்கியுள்ளனர். ஆனால், நாயகியின் பல்டி தயாரிப்பாளரை பல்டி அடிக்க வைத்துவிட்டது.
இதனால், இருபது நாட்கள் மட்டுமே நடந்த மோகினி திரைப்படத்தை நிறுத்த சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர். இதையடுத்து இயக்குனர் மாதேஷும் தற்போது படப்பிடிப்பை நிறுத்தி கிடப்பில் போட்டுவிட்டாராம். இதனால் கடுப்பான த்ரிஷா கூல் ஆக வெளிநாட்டிற்கு சென்றுள்ளாராம்.