ஏம்ப்பா இந்த நாயை யாராவது எங்கேயாவது பார்த்தீங்களா?: கேட்கிறார் த்ரிஷா
சென்னை: ஓஸ்ஸி என்ற நாய் காணாமல் போய்விட்டதாம். அது பற்றி தகவல் அறிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுள்ளார் நடிகை த்ரிஷா.
தெரு நாய்களை எடுத்து வளர்ப்பதற்கு பெயர் போனவர் நடிகை த்ரிஷா. யாராவது தங்கள் நாயை காணவில்லை என்று ட்வீட்டினால் உடனே அதை தானும் ட்வீட்டுவார் த்ரிஷா.

இந்நிலையில் ஒருவர் தனது நாயை காணவில்லை என்று ட்வீட்டினார்.
இதையடுத்து த்ரிஷா ட்விட்டரில் காணாமல் போன நாயின் புகைப்படத்தை வெளியிட்டு கூறியிருப்பதாவது,
ஓஸ்ஸி என்கிற வெள்ளை நிற லாஸா நாய்க்குட்டி ஆழ்வார்பேட்டையில் காணவில்லை. ஏதாவது தகவல் தெரிந்தால் 9840099334 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். சன்மானம் உண்டு என தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications