Don't Miss!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Finance மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - வைப்புநிதி திட்டம்: எதில் அதிக வரி சலுகை பெற முடியும்?
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
த்ரிஷாவுக்கு போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை! சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படும் வகையில் தோழிகளுடன் சப்தமாகபாட்டுக் கேட்டு ஆட்டமாடியதற்காக நடிகை த்ரிஷாவை போலீஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.நேற்று நள்ளிரவு கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீலாங்கரை பகுதியில் நடிகை த்ரிஷா தனது காரில் சப்தமாக பாட்டுப்போட்டவாறு, தோழிகளுடன் கும்மாளம் போட்டதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், நீலாங்கரை போலீஸில் புகார்செய்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்ற போது கார் அங்கில்லை. த்ரிஷாவும், தோழிகளும் அந்த இடத்தை விட்டுபறந்து விட்டனர்.இருப்பினும் பொதுமக்கள் த்ரிஷாவின் கார் எண்ணை போலீஸாரிடம் கொடுத்ததைத் தொடர்ந்து அந்த எண்ணுக்குரிய காரின்உரிமையாளர் யார் என்பதை போலீஸார் கண்டறிந்தனர். அது த்ரிஷாவின் கார் என்பது தெரிய வந்ததும், த்ரிஷாவைஅழைத்து போலீஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை கிழக்குக்கடற்கரைச் சாலை சன் ரைஸ் அவென்யூ பகுதியில் அடிக்கடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சப்தமாக பாட்டு வைத்து ஆட்டம் போடுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதுபோல கும்மாளம் போட்டுபொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.நடிகை த்ரிஷாவும், அவரது தோழிகளும் இதுபோல சப்தமாக பாட்டு போட்டு இடையூறு செய்தது உண்மை தான். இதற்காகத்ரிஷாவை கடுமையாக எச்சரிக்கை செய்து போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற புகார்கள் எதிர்காலத்தில் வந்தால்கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நடிகை த்ரிஷா விவகாரம் குறித்து துணை ஆணையர் ஆயுஷ்மணி திவாரி, உதவி ஆணையர் ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீஸ்உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இன்று விசாரணை நடத்தினர். சன் ரைஸ் அவென்யூ பகுதியில் உள்ளகிளப்களுக்கும் போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.த்ரிஷாவுடன் ஆண் நண்பர்கள் யாரும் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் அடிக்கடி இந்தப் பகுதிக்கு வந்துதோழிகளுடன் கும்மாளம் போடுவது வாடிக்கை என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள். த்ரிஷா மட்டுமல்லாது வேறு பல பிரபலங்களும் இப்பகுதியில் அடிக்கடி பாட்டுக் கேட்டும், ஆட்டம் ஆடியும் பொதுஅமைதிக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.த்ரிஷா மறுப்பு:இதற்கிடையே, பொதுமக்கள் கூறுவது போல தான் ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி கலாட்டா செய்யவில்லை என்று த்ரிஷாமறுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நான் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்று விட்டு 2 மாதங்கள் கழித்து சிலநாட்களுக்கு முன்பு தான் சென்னை வந்தேன். சென்னைக்கு வரும்போதெல்லாம் எனது தோழிகளுடன் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சன் ரைஸ் அவென்யூ பகுதியில்சந்திப்போம். அதேபோலத் தான் சம்பவ தினத்தன்றும் நான் காரை ரோட்டோரம் நிறுத்தி விட்டு தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ரோந்து வந்த போலீஸார் காரைப் பார்த்து விட்டு இங்கு ஏன் நிறுத்தியிருக்கிறீர்கள் என்று கேட்டனர். பின்னர்விசாரணைக்குப் பின்னர் சென்று விட்டனர்.மற்றபடி பொதுமக்கள் கூறுவது போல நான் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாகபத்திரிக்கைளில் வந்துள்ள செய்தி தவறானது. இது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. என்னுடன் ஆண்நண்பர்கள் யாரும் அப்போது இல்லை என்று கூறியுள்ளார்.த்ரிஷா விவகாரம் தொடர்பாக தவறான செய்திகளைப் பரப்பியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாக அவரதுதாயார் கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு குளியல் காட்சி சர்ச்சையில் சிக்கினார் த்ரிஷா. தற்போது கடற்கரையில் கும்மாளம் போட்டதாகஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளார்.
சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படும் வகையில் தோழிகளுடன் சப்தமாகபாட்டுக் கேட்டு ஆட்டமாடியதற்காக நடிகை த்ரிஷாவை போலீஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீலாங்கரை பகுதியில் நடிகை த்ரிஷா தனது காரில் சப்தமாக பாட்டுப்போட்டவாறு, தோழிகளுடன் கும்மாளம் போட்டதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், நீலாங்கரை போலீஸில் புகார்செய்தனர்.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்ற போது கார் அங்கில்லை. த்ரிஷாவும், தோழிகளும் அந்த இடத்தை விட்டுபறந்து விட்டனர்.
இருப்பினும் பொதுமக்கள் த்ரிஷாவின் கார் எண்ணை போலீஸாரிடம் கொடுத்ததைத் தொடர்ந்து அந்த எண்ணுக்குரிய காரின்உரிமையாளர் யார் என்பதை போலீஸார் கண்டறிந்தனர். அது த்ரிஷாவின் கார் என்பது தெரிய வந்ததும், த்ரிஷாவைஅழைத்து போலீஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை கிழக்குக்கடற்கரைச் சாலை சன் ரைஸ் அவென்யூ பகுதியில் அடிக்கடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்,
சப்தமாக பாட்டு வைத்து ஆட்டம் போடுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதுபோல கும்மாளம் போட்டுபொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நடிகை த்ரிஷாவும், அவரது தோழிகளும் இதுபோல சப்தமாக பாட்டு போட்டு இடையூறு செய்தது உண்மை தான். இதற்காகத்ரிஷாவை கடுமையாக எச்சரிக்கை செய்து போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற புகார்கள் எதிர்காலத்தில் வந்தால்கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நடிகை த்ரிஷா விவகாரம் குறித்து துணை ஆணையர் ஆயுஷ்மணி திவாரி, உதவி ஆணையர் ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீஸ்உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இன்று விசாரணை நடத்தினர். சன் ரைஸ் அவென்யூ பகுதியில் உள்ளகிளப்களுக்கும் போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.
த்ரிஷாவுடன் ஆண் நண்பர்கள் யாரும் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் அடிக்கடி இந்தப் பகுதிக்கு வந்துதோழிகளுடன் கும்மாளம் போடுவது வாடிக்கை என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.
த்ரிஷா மட்டுமல்லாது வேறு பல பிரபலங்களும் இப்பகுதியில் அடிக்கடி பாட்டுக் கேட்டும், ஆட்டம் ஆடியும் பொதுஅமைதிக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
த்ரிஷா மறுப்பு:
இதற்கிடையே, பொதுமக்கள் கூறுவது போல தான் ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி கலாட்டா செய்யவில்லை என்று த்ரிஷாமறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நான் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்று விட்டு 2 மாதங்கள் கழித்து சிலநாட்களுக்கு முன்பு தான் சென்னை வந்தேன்.
சென்னைக்கு வரும்போதெல்லாம் எனது தோழிகளுடன் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சன் ரைஸ் அவென்யூ பகுதியில்சந்திப்போம். அதேபோலத் தான் சம்பவ தினத்தன்றும் நான் காரை ரோட்டோரம் நிறுத்தி விட்டு தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
அப்போது ரோந்து வந்த போலீஸார் காரைப் பார்த்து விட்டு இங்கு ஏன் நிறுத்தியிருக்கிறீர்கள் என்று கேட்டனர். பின்னர்விசாரணைக்குப் பின்னர் சென்று விட்டனர்.
மற்றபடி பொதுமக்கள் கூறுவது போல நான் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாகபத்திரிக்கைளில் வந்துள்ள செய்தி தவறானது. இது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. என்னுடன் ஆண்நண்பர்கள் யாரும் அப்போது இல்லை என்று கூறியுள்ளார்.
த்ரிஷா விவகாரம் தொடர்பாக தவறான செய்திகளைப் பரப்பியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாக அவரதுதாயார் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு குளியல் காட்சி சர்ச்சையில் சிக்கினார் த்ரிஷா. தற்போது கடற்கரையில் கும்மாளம் போட்டதாகஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளார்.