சமூக வலைதளத்தில் கலாய்ப்பவர்கள் காமத்துக்கு பிறந்தவர்கள்: நடிகர் பொளேர்
மும்பை: சமூக வலைதளங்களில் கேவலமாக கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் பாசத்தால் அல்ல மாறாக வானிலை காரணமாக பிறந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகர் கபில் சர்மா.
பிரபல இந்தி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான கபில் சர்மாவுக்கு ரசிகர்கள் அதிகம். இருப்பினும் சமூக வலைதளங்களில் அவரை கலாய்ப்பவர்களும் அதிகம்.
பிரபலங்களை சமூக வலைதளங்களில் கலாய்ப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் இது குறித்து கபில் கூறியிருப்பதாவது,

கபில் சர்மா
சமூக வலைதளங்களில் நம்மை பின்தொடர்பவர்கள் மூன்று ரகம். ஒன்று நம் ரசிகர்கள். இரண்டு நம்மை விமர்சிப்பவர்கள், மூன்று வீணாப்போனவர்கள். அவர்களுக்கு நெகட்டிவிட்டியை தவிர வேறு எதுவும் தெரியாது.

ரசிகர்கள்
என் கெரியர் பற்றி விமர்சித்து எனக்கு நல்லது சொல்லும் ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால் அந்த அந்த வீணாப் போன ரகத்தை சேர்ந்தவர்களுக்கு குறை சொல்வதை தவிர வேறு வேலையே இல்லை.

பாசம்
அந்த மூன்றாவது ரகத்தை சேர்ந்தவர்கள் திட்டமிடப்படாமல் பிறந்தவர்கள். அதாவது வானிலை காரணமாக பிறந்தவர்கள் அவர்கள். அதனால் அவர்கள் சொல்வதை எல்லாம் கண்டுகொள்ளக் கூடாது.

செல்போன்
மூன்றாம் ரகத்தை சேர்ந்தவர்கள் ஏதாவது கூறினால் நான் முன்பு எல்லாம் பதில் அளித்தேன். ஆனால் தற்போது நான் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. இலவச டேட்டா இருப்பதால் மக்கள் எப்பொழுது பார்த்தாலும் போனும், கையுமாக உள்ளார்கள் என்கிறார் கபில்.


Click it and Unblock the Notifications











