Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
முதுகெலும்பில்லாத தமிழக அரசை நினைத்தால் வெட்கமாக உள்ளது: பிரகாஷ் ராஜ்
Recommended Video
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் விளாசியுள்ளார்.
தூத்துக்குடியில் தங்களின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் பலியாகினர். போராடும் மக்களை சந்திக்க கமல் ஹாஸன் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழக அரசை விளாசி ட்வீட்டியுள்ளார்.
|
பிரகாஷ் ராஜ்
போராடும் பொதுமக்களை கொல்வதா..முதுகெலும்பில்லாத தமிழக அரசை நினைத்தால் வெட்கமாக உள்ளது. மக்களின் போராட்டக் குரல் கேட்கவில்லையா, மாசு குறித்த மக்களின் துயரம் தெரியவில்லையா, இல்லை அதிகாரத்தில் இருக்க மத்திய அரசின் தாளத்திற்கு ஏற்ப ஆடுவதில் பிசியாக உள்ளதா என்று கேட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.
|
கார்த்தி
தூத்துக்குடியில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 10க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.
|
சேரன்
வாழ்வை உயிரைப்பறிக்கும் தொழில்வளர்ச்சி தேவையா என யோசிக்காத அரசாங்கம் நமக்கு தேவையா.மக்கள் உணரவேண்டும்.மாற்றம் காணாமல் மாண்டுபோகவா பிறந்தோம் என்று இயக்குனரும், நடிகருமான சேரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
சுசீந்திரன்
நம் கவனத்தை திசை திருப்ப பல்வேறு செய்திகள் முன்னிலைப்படுத்தப்படும் இம்முறை அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.