Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest
Recommended Video
சென்னை: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கலகக்கார குழுக்கள் தான் காரணம் என்று நடிகை கார்த்திகா நாயர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சுவாசிக்க நல்ல காற்றும், குடிக்க சுத்தமான நீரும் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானவர்களில் 17 வயது சிறுமியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
|
கார்த்திகா நாயர்
சில கலகக்கார குழுக்களால் தான் தூத்துக்குடியில் நடந்த அமைதிப் போராட்டம் வன்முறையாக மாறியது என்று நடிகை கார்த்திகா நாயர் கருத்து தெரிவித்துள்ளார்.
|
உளவுத்துறை
கார்த்திகா நாயரின் ட்வீட்டை பார்த்த ஒருவர் நீங்கள் என்ன ரா அல்ல உளவுத் துறையில் பணியாற்றுகிறீர்களா?. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 17 வயது மாணவி வெனிஸ்டா, 19 வயது கல்லூரி மாணவர் கார்த்திக் எல்லாம் கலகக்கார குழு என்று உங்களுக்கு தெரியுமா. ஷட் அப் என்று கமெண்ட் போட்டுள்ளார்.
|
ஆங்கிலம்
முதலில் ஆங்கிலத்தை புரிந்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அமைதிப் போராட்டத்தை வன்முறையாக மாற்றியவர்களால் அப்பாவி உயிர்கள் போயுள்ளது. இறந்தவர்கள் குழுக்களை சேர்ந்தவர்கள் என்று நான் கூறவில்லை என்று கார்த்திகா பதில் அளித்துள்ளார்.
|
தமிழகம்
தமிழக மக்கள் அவர்களின் போராட்டங்கள் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. இங்கு கலகக்காரர்கள் யார்? என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி
தூத்துக்குடி போராட்டத்தில் கலகக்காரர்களால் வன்முறை வெடித்தது என்று கருத்து தெரிவித்த ஆர்.ஜே. பாலாஜியை மக்கள் விளாசிய நிலையில் கார்த்திகாவும் அதையே கூறி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.