Don't Miss!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Sports ஹர்திக் vs ரோகித் - எங்க அணியில் விரிசல் இல்லை.. வீடியோ வெளியிட்டு சிக்கி கொண்ட மும்பை இந்தியன்ஸ்
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- News முருகனை அடுத்து மாரியம்மன் வழிபாட்டில் வள்ளிக் கும்மி… காரணம் என்ன?
- Education 5-ம் வகுப்பு வரையிலான வினாத்தாள் நடைமுறை மாற்றம்.!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இந்த அரசு துடைத்தெறியப்பட வேண்டும், மோடி மவுனம் கலைக்கணும்: திரையுலகினர் கொந்தளிப்பு #sterlite
Recommended Video
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு திரையுலகினர் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் சுவாசிக்க நல்ல காற்று வேண்டும் என்று கூறி போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடுமையை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மோடி மவுனம் கலைக்க வேண்டும் என்று விஷால் கூறியுள்ளார்.
— Vishal (@VishalKOfficial) May 22, 2018 |
விஷால்
பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 2019 பற்றி மக்கள் கவனமாக யோசிக்க வேண்டும் என்கிறார் விஷால்.
ராஜு முருகன்
தூத்துக்குடியில் நடந்த சம்பவம் மன்னிக்கவே முடியாத அரச பயங்கரவாதம் என்று கொந்தளித்துள்ளார் ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன்.
|
நடிகர் சங்கம்
தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.
|
விவேக்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களை நினைத்து தன் இதயம் அழுவதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
|
பார்த்திபன்
பிணநாயகம்
●●●●●●●●●●●
துப்பாக்கி வெடிக்கும் - தெரிந்தும்,
புரட்சி வெடிக்கும் - தெரியாமலும்
அதிகாரம் ஜனநாயகத்தை
ஒடுக்க நினைக்கிறது
பசியால்
மார்பை நாடி வரும் சிசுவை
முலைக்காம்பே தோட்டாவாக இயங்கி சிதைத்து ரத்தமூட்டுதல் போல ...தம் மக்களை தாயே(அரசே) கொன்று குவித்தால்? என்று பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
கமல் ஹாஸன்
தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறனார் கமல் ஹாஸன்.