கண்மூடித்தனமாகத் தாக்கினார்.. கணவர் மீது நடிகை போலீசில் புகார்.. பிரபல சீரியல் நடிகர் கைது!

Recommended Video

Shocking Serial Actor Eshwar Ragunath Arrest | Jayasree Eshwar

சென்னை: மனைவியை தாக்கிய வழக்கில் பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்யாணப் பரிசு உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாத். சின்னத்திரையில் நடன இயக்குனராக உள்ள ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜெயஸ்ரீயும் சீரியல் நடிகை தான். அவர் வம்சம் உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் இவர்கள் இருவரும் சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையில் வசித்து வருகின்றனர்.

கடன் பிரச்சினை

கடன் பிரச்சினை

ஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்கள் சிலவற்றை அடகு வைத்து ரூ.30 லட்சம் வரை ஈஸ்வர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஈஸ்வரால் கடனை திருப்பிச் செலுத்தி, அடகு வைத்த பத்திரத்தை மீட்க முடியாத நிலை இருந்து வந்துள்ளது.

சண்டை

சண்டை

இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பிரச்சினை முற்றி, இருவருக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது.

புகார்

புகார்

அப்போது, ஜெயஸ்ரீயை ஈஸ்வர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், ஈஸ்வர் மற்றும் அவரது தாய் சந்திரா ஆகியோரை கைது செய்தனர்.

கைது

கைது

54 வயதாகும் சந்திராவை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். ஈஸ்வர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஈஸ்வர் அடித்ததால் காயமடைந்த ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X