Just In
- 14 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 14 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 15 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 15 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடந்து சென்ற பெண்ணிடம் பர்ஸை பறித்த சீரியல் நடிகர் கைது... ஷாக் கொடுக்கும் சிசிடிவி காட்சிகள்!
மும்பை: நடந்து சென்ற பெண்ணிடம் பர்ஸை பறித்த டி.வி.சிரியல் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் வாசி பகுதியை சேர்ந்தவர், அருணா நாயர். இவர் தனது மகள் மற்றும் மற்றொரு பெண்ணுடன் சாலையில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பைக், வேகமாக வந்தது. இவர்கள் அருகில் வந்ததும் பைக்கின் வேகம் குறைந்தது.

கைப்பையை இழுத்தார்
அருணா நாயரும் அவர்களும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டு நடந்துகொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த நபர், திடீரென்று அருணா நாயர் வைத்திருந்த கைப்பையை பிடித்து இழுத்தார். இதில் நிலை தடுமாறிய அருணா, பையை உடனடியாக விட்டுவிடவில்லை. பைக் நபர் வேகமாக இழுத்ததும், அருணா கீழே விழுந்தார். தரையில் சில தூரம் அவர் இழுத்துச் செல்லப்பட்டதால், அவரது முன் பல் உடைந்து ரத்தம் கொட்டியது.

மடக்கிப் பிடித்தனர்
தலையிலும் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டது. கைப்பை கிடைத்ததும் அந்த நபர், பைக்கில் பறந்தார். அங்கிருந்தவர்கள், திருடன் திருடன் என்று கத்தினர். உடனடியாக அருகில் சென்று கொண்டிருந்த சிலர், பைக்கில் சென்றத் திருடனை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் மாணிக்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்ததும் ஒப்படைத்தனர்.

சினிமா இயக்குனர்
இந்த சம்பவம் அப்படியே அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இதற்கிடையே, காயமடைந்த அருணா நாயரை, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைப்பையை திருடிய நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சினிமா இயக்குனர் என்பதும் நடிகர் என்பதும் தெரியவந்தது.

கிரைம் தொடர்கள்
இதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் பெயர் புனித் சிங். சில இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக கிரைம் தொடர்களில் அதிகமாக நடித்துள்ளார். அவர் படமும் இயக்கியுள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறதாம். அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். இந்த தகவலை மணிக்பூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர கும்ப்ளே தெரிவித்துள்ளார்.