Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடந்து சென்ற பெண்ணிடம் பர்ஸை பறித்த சீரியல் நடிகர் கைது... ஷாக் கொடுக்கும் சிசிடிவி காட்சிகள்!
மும்பை: நடந்து சென்ற பெண்ணிடம் பர்ஸை பறித்த டி.வி.சிரியல் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் வாசி பகுதியை சேர்ந்தவர், அருணா நாயர். இவர் தனது மகள் மற்றும் மற்றொரு பெண்ணுடன் சாலையில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பைக், வேகமாக வந்தது. இவர்கள் அருகில் வந்ததும் பைக்கின் வேகம் குறைந்தது.
கைப்பையை இழுத்தார்
அருணா நாயரும் அவர்களும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டு நடந்துகொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த நபர், திடீரென்று அருணா நாயர் வைத்திருந்த கைப்பையை பிடித்து இழுத்தார். இதில் நிலை தடுமாறிய அருணா, பையை உடனடியாக விட்டுவிடவில்லை. பைக் நபர் வேகமாக இழுத்ததும், அருணா கீழே விழுந்தார். தரையில் சில தூரம் அவர் இழுத்துச் செல்லப்பட்டதால், அவரது முன் பல் உடைந்து ரத்தம் கொட்டியது.
மடக்கிப் பிடித்தனர்
தலையிலும் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டது. கைப்பை கிடைத்ததும் அந்த நபர், பைக்கில் பறந்தார். அங்கிருந்தவர்கள், திருடன் திருடன் என்று கத்தினர். உடனடியாக அருகில் சென்று கொண்டிருந்த சிலர், பைக்கில் சென்றத் திருடனை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் மாணிக்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்ததும் ஒப்படைத்தனர்.
சினிமா இயக்குனர்
இந்த சம்பவம் அப்படியே அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இதற்கிடையே, காயமடைந்த அருணா நாயரை, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைப்பையை திருடிய நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சினிமா இயக்குனர் என்பதும் நடிகர் என்பதும் தெரியவந்தது.
கிரைம் தொடர்கள்
இதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் பெயர் புனித் சிங். சில இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக கிரைம் தொடர்களில் அதிகமாக நடித்துள்ளார். அவர் படமும் இயக்கியுள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறதாம். அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். இந்த தகவலை மணிக்பூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர கும்ப்ளே தெரிவித்துள்ளார்.