Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
திருமணமான ஒரே ஆண்டில் தெலுங்கு டிவி நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
விசாகப்பட்டினம்: பிரபல தெலுங்கு டிவி நிகழ்ச்சியான ஜபர்தஸ்த் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல தெலுங்கு டிவி நிகழ்ச்சியான ஜபர்தஸ்த் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷ். அவருக்கும் திரிபுரம்பிகா(22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி திருமணமானது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு திரிபுரம்பிகா விசாகப்பட்டினத்தில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திரிபுரம்பிகா மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை ரமேஷின் சகோதரி பார்த்துவிட்டு அலறினார்.
உடனே குடும்பத்தார் வந்து கதவை உடைத்து திரிபுரம்பிகாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த ரமேஷ் மனைவி இறந்த தகவல் கிடைத்தவுடன் விசாகப்பட்டினம் வந்தார். ரமேஷின் குடும்பத்தார் தங்களின் மகளை கொடுமைப்படுத்தி வந்ததாக திரிபுரம்பிகாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து ரமேஷ் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.