Don't Miss!
- Technology அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போதை பொருள் விவகாரம்.. பிரபல டிவி சீரியல் நடிகையிடம் 6 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை!
பெங்களுரு: போதை பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல டிவி சீரியல் நடிகையிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுஷாந்த் மரணத்தை தொடர்ந்து போதை பொருள் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
பாலிவுட் மட்டுமின்றி கன்னட சினிமாவிலும் போதை பொருள் புழக்கம் எல்லை மீறியிருப்பது தெரியவந்துள்ளது.
மாஸ்டர் பட ட்ரெயிலர் எப்போது ரிலீஸ்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சிறையில் அடைப்பு
போதை பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள் கைதாகியுள்ளனர். ராஹினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போதை பொருள்
இந்நிலையில் கன்னட வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையை சேர்ந்த நடிகர் நடிகைகளுக்கும் போதை மருந்து பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் பிரம்ஹந்து என்ற டிவி சிரியலில் லீடிங் ரோலில் நடித்து வருபவர் கீதா பாரதி பட். இவருக்கு போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
கிடுக்கிப்பிடி விசாரணை
அதன்படி நேற்று விசாரணைக்கு ஆஜரான அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவின் உட்பிரிவு அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். இதேபோல் நடிகர் அபிஷேக் தாஸிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இருவரிடமும் சுமார் 6 மணிநேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றுள்ளது.
விசாரணைக்கு அழைத்தார்கள்
விசாரணையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கீதா பாரதி பட், தன்னிடம் விசாரணை நடத்திய அதிகாரியிடம் தனது போன் நம்பரை கொடுத்ததாகவும், கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று அழைக்கவில்லை. விசாரணைக்கு தான் அழைத்தார்கள்.
Recommended Video
ஒத்துழைப்பேன்
நிறைய ஊடகங்கள் எங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சித்தரிக்கின்றன. இது தவறு, எங்களுக்கு குடும்பங்கள் இருப்பதால் அது அவர்களை எதிர்மறையாக பாதிக்கும். அவர்கள் என்ன என்பதை அறிய நான் விசாரணைக்கு செல்ல வேண்டும் . அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள், நான் எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பேன் என தெரிவித்துள்ளார்.