சீரியல் நடிகை கல்யாணிக்கு கல்யாணம்...
குட்டிப் பெண்ணாய் ஏராளமான டிவி சீரியல்களிலும், ஓரிரு தமிழ்ப் படங்களிலும் தலை காட்டியவர் கல்யாணி. இப்போது பூர்ணிதா என்று பெயரை மாற்றிகொண்டுள்ளார்.
பீச் கேர்ல்ஸ் நிகழ்ச்சியை ராஜ் டிவியில் தொகுத்து வழங்கினார். தற்போது விஜய் டிவியில் தாயுமானவன் சீரியலில் ரிப்போர்ட்டராக நடித்து வருகிறார்.

நம்முடைய செய்தி அதைப்பற்றியதல்ல. கல்யாணிக்கு (பூர்ணிதா) கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறதாம். பொண்ணு, இப்பதான் குட்டிக் குழந்தையா... பிரபுதேவா கூட டான்ஸ் ஆடுன மாதிரி இருக்கு. அதுக்குள்ள கல்யாண வயசு வந்துடுச்சா என்று கேட்பவர்களுக்கு அவரே வெட்கத்துடன் ஆமாம் கூறியுள்ளார்.
கல்யாணியின் கணவர் ரோஹித். சொந்த ஊர் கேரளாவாக இருந்தாலும் இப்போது மும்பையில் செட்டில் ஆன டாக்டராம். சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
கல்யாணி நடித்துக் கொண்டிருக்கும் 'தாயுமானவன்' சீரியலை முதல் ஆளாக உக்காந்து பாக்கறது மாமியார் வீட்டில்தானாம். அந்த அளவுக்கு எல்லாரும் முழு சப்போர்ட் என்கின்றனர். திருமணத்திற்கு பிறகு நல்ல கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பா நடிப்பேன் என்கிறார்.


Click it and Unblock the Notifications











