Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டிங்குவின் மனைவி கொடுத்த புகார் எதிரொலி- டிவி நடிகை கவிதாவுக்கு வலைவீச்சு
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்தவர் டிங்கு. கமல்ஹாசனுடன் ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் நடித்துள்ளார். தற்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இவரது மனைவி சுப்ரியா. இவர்கள் காதல் மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. டிங்குவின் அக்காள் சோனியா. இவர் சினிமா நடிகை, டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இவரது கணவர் போஸ் வெங்கட். சீரியல்களில் நடித்து சினிமாவிலும் தலை காட்டியவர்.
டிங்குவின் மனைவி சுப்ரியா சென்னை, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், "ஒரு பட்டதாரி பெண்ணான நான் 1999-ல் சின்னத்திரை நடிகரான டிங்கு என்கிற அருண்காந்தை காதலித்து திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் எனது குடும்பத்துக்கு எங்கள் திருமணம் பற்றி தெரியாது. தெரிந்த பிறகு எனது பெற்றோர் எங்களுடைய திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி வைத்தார்கள்.
திருமணத்தின்போது ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் எனக்கு அணிவிக்கப்பட்டது. 15 கிலோ வெள்ளி பாத்திரங்கள் சீதனமாக தந்தார்கள். என் கணவருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள திருமண உடைகள் வாங்கி கொடுத்தனர். கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு அவரது தாயார் அஞ்சனாதேவி, எனது நகைகளையும், சீதன பொருட்களையும் வாங்கிக் கொண்டார்.
பின்னர் 'எனது தாய் வீட்டில் இருந்து வரதட்சணையாக கார் வாங்கி வரவேண்டும்' என்றார். எனது மாமியாரும், கணவரின் சகோதரி நடிகை சோனியா போஸும் கார் வாங்கி வரும்படி தொடர்ந்து வற்புறுத்தினார்கள். என்னை கேவலமாகவும் ஏசினார்கள். எனது கணவரும், கார் வாங்கி வராவிட்டால் உன்னுடன் சேர்ந்து வாழமாட்டேன்' என்று மிரட்டினார்.
கார் வராவிட்டால் வேறு பெண்ணை என் மகனுக்கு கட்டி வைத்து விடுவேன் என்று மாமியார் அஞ்சனாதேவி சொல்லி வந்தார். ஆரம்பத்தில் என்னிடம் அன்பாக இருந்த என் கணவர் டிங்கு, குழந்தை பிறந்த பிறகு வீட்டுக்கு தாமதமாக வந்தார்.
சில நாட்கள் வீட்டுக்கே வருவது இல்லை. இதற்கிடையே என் கணவர் கவிதா என்ற நடன நடிகையை 2-வது திருமணம் செய்தது எனக்கு தெரியவந்தது. எனக்கு தெரியாமல் சட்டவிரோதமாக அந்த பெண்ணை அவர் மணந்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எனவே எனது கணவர் டிங்கு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியிருந்தார் சுப்ரியா.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டை அணுகினார் டிங்கு. ஆனால் சுப்ரியா தரப்பில் முன்ஜாமீன் தரக் கூடாது என்று வாதிடப்பட்டது. மேலும் டிங்கு, நடிகை கவிதாவை கல்யாணம் செய்தது தொடர்பான ஆதாரங்களையும் அவர்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து உத்தரவை அக்டோபர் 20ம் தேதிக்கு நீதிபதி தேவதாஸ் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் தற்போது சுப்ரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை கவிதாவைப் பிடிக்க போலீஸார் முடிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். போலீஸார் தேடி வருவதை அறிந்த கவிதா தலைமறைவாகி விட்டார்.
கவிதாவைக் கைது செய்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.