Don't Miss!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிறுநீரகப் பிரச்னை.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகை திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
மும்பை: பிரபல டிவி நடிகை சிறுநீரகப் பிரச்னை காரணமாக திடீரென உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
2020 ஆம் ஆண்டு சினிமா மற்றும் சின்னத்திரைக்கு கருப்பு வருடமாக அமைந்திருக்கிறது.
இந்த வருடத்தில் பல முக்கியமான சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.
கிளாஸ் ஆஃப் 2020
இந்நிலையில் டிவி நடிகை லீனா ஆச்சாரியா, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பது, இந்தி சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர், ஆப் கே ஆ ஜானே சே, மேரி ஹனிகரக் பிவி, கிளாஸ் ஆஃப் 2020 உள்பட சில டிவி தொடர்களில் நடித்திருக்கிறார்.
திடீரென உயிரிழப்பு
இவருக்கு கடந்த ஒரு வருடமாக சிறுநீரகப் பிரச்னை இருந்தது. அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், இதுபற்றி நெருங்கிய நண்பர்களுக்கு கூட அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த சனிக்கிழமை திடீரென்று உயிரிழந்தார். அவருக்கு வயது 30.
இழந்து விட்டோம்
இதை அவருடன், கிளாஸ் ஆஃப் 2020 என்ற தொடரில் நடித்த நடிகர் ரோகம் மெஹ்ரா உறுதிப்படுத்தியுள்ளார். அவர் சோசியல் மீடியாவில் லீனாவுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில், கடந்த வருடம் இதே நாளில் கிளாஸ் ஆப் 2020 ஷூட்டிங்கில் இருந்தோம். இப்போது உங்களை இழந்து விட்டோம் என்று கூறியுள்ளார்.
பெர்பக்ட் பதி
லீனாவுடன், பெர்பக்ட் பதி என்ற தொடரில் நடித்த நடிகர் ஆயுஷ் ஆனந்த் கூறும்போது, 'அவர் சகோதரருடன் நேற்று பேசினேன். அவருக்கு சில வருடங்களாக சிறுநீரகப் பிரச்னை இருந்துள்ளது. இப்படியொரு பிரச்னை இருப்பதே சில நாட்களுக்கு முன் தான் எனக்கு தெரியும். அவர் ஒரு கிட்னியுடன் தான் வசித்து வந்தார்.
அம்மா தானம்
அதுவும் அவர் அம்மா தானமாகக் கொடுத்தது. சிகிச்சை பலனிறி அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். அவர் மறைவுக்கு சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இளம் நடிகை ஒருவர் சிறுநீரகப் பிரச்னையால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.