Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
விவசாயியிடம் பண மோசடி: டிவி நடிகை, அம்மாவுக்கு 2 ஆண்டு சிறை
மும்பை: செக் மோசடி வழக்கில் பிரபல டிவி நடிகை மற்றும் அவரின் அம்மாவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் கரீனா கபூர் அம்மாவாகவும், குயீன் படத்தில் கங்கனா அம்மாவாகவும் நடித்தவர் அல்கா கவுசல். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அவரும், அவரது அம்மாவும் சேர்ந்து தொலைக்காட்சி தொடர் எடுப்பதாக விவசாயி அவதார் சிங்கிடம் ரூ. 50 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் சொன்னதுபடி தொலைக்காட்சி தொடர் எடுக்கவில்லை.
கொடுத்த பணத்தை கேட்டபோது அவதார் சிங்கிடம் இரண்டு செக்குகளை அளித்துள்ளார் அல்கா. அந்த செக்குள் பவுன்ஸாகிவிட்டன. இதையடுத்து அவதார் சிங் போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த பஞ்சாபில் உள்ள மலர்கோட்லா நீதிமன்றம் அல்கா மற்றும் அவரது தாய்க்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அல்கா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளாராம்.