Don't Miss!
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விவசாயியிடம் பண மோசடி: டிவி நடிகை, அம்மாவுக்கு 2 ஆண்டு சிறை
மும்பை: செக் மோசடி வழக்கில் பிரபல டிவி நடிகை மற்றும் அவரின் அம்மாவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் கரீனா கபூர் அம்மாவாகவும், குயீன் படத்தில் கங்கனா அம்மாவாகவும் நடித்தவர் அல்கா கவுசல். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அவரும், அவரது அம்மாவும் சேர்ந்து தொலைக்காட்சி தொடர் எடுப்பதாக விவசாயி அவதார் சிங்கிடம் ரூ. 50 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் சொன்னதுபடி தொலைக்காட்சி தொடர் எடுக்கவில்லை.
கொடுத்த பணத்தை கேட்டபோது அவதார் சிங்கிடம் இரண்டு செக்குகளை அளித்துள்ளார் அல்கா. அந்த செக்குள் பவுன்ஸாகிவிட்டன. இதையடுத்து அவதார் சிங் போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த பஞ்சாபில் உள்ள மலர்கோட்லா நீதிமன்றம் அல்கா மற்றும் அவரது தாய்க்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அல்கா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளாராம்.