Don't Miss!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: காதல் காரணமா?
ஹைதராபாத்: தெலுங்கு டிவி நடிகை நாக ஜான்சி ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நாக ஜான்சி(21). பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பவித்ர பந்தன் சீரியல் மூலம் அவர் மிகவும் பிரபலமானார்.
ஜான்சி ஹைதராபாத்தில் வீடு எடுத்து தங்கி நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்கொலை
ஜான்சியின் வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் துர்கா பிரசாத் கதவை பல முறை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு கதவை உடைத்துப் பார்த்தபோது ஜான்சி மின்விசிறியில் பிணமாகத் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
விசாரணை
தகவல் அறிந்த போலீசார் ஜான்சியின் வீட்டிற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜான்சியின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதல்
ஜான்சி தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு ஆணிடம் சாட்டிங் செய்துள்ளார். கடந்த 6 மாதங்களாக அவர் அந்த நபருடன் நெருக்கமாக பழியுள்ளாார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தம்
ஜான்சி தூரத்து உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அந்த காதலுக்கு ஜான்சியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.