Don't Miss!
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- News தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி 8 போட்ட பிரதமர் மோடி! முதல் பிரமர் இவர்தான்! பிளான் என்ன தெரியுமா?
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அவ்வளவு அழுத்தம் கொடுத்து என் கணவரை கொன்னுட்டானுங்க.. கடவுள் பார்த்துப்பாரு.. சீரியல் நடிகை ஆவேசம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தோள் மேல ராஜா சின்ன ரோஜா படத்தில் ஏறி நின்ன நடிகை ராகவி சசிகுமாரின் கண்ணீர் கதை பலரையும் உருக்கி வருகிறது.
சில படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரை நடிகையாக நீண்ட காலமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டு நடிகை ராகவியின் கணவர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பாட்ஷா இஸ் பேக்.. வயசானாலும் ஸ்டைலும் வேகமும் குறையவே இல்ல.. தெறிக்கவிடும் ரஜினியின் வீடியோ!
ராஜா சின்ன ரோஜா படத்தில்
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியான ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் வளர்ந்த குழந்தை நட்சத்திரமாக நடிகை ராகவி சினிமா உலகில் அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் ரஜினிகாந்தின் தோள் மீது ஏறி நிற்க வேண்டிய காட்சியில் நடிக்க மிகவும் பயந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
கணவர் தற்கொலை
8 ஆண்டுகள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த ராகவி சசிகுமார் திருமணம் 13 ஆண்டுகள் சந்தோஷமாக கடந்த நிலையில், திடீரென அவரது கணவர் கடந்த 2019ம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
திருட்டு பட்டம்
வேலை இடத்தில் கேமிராவை திருடிவிட்டார் என திருட்டு பட்டம் கட்டி என் கணவருக்கு அதிகமான மன அழுத்தம் கொடுத்தே கொன்று விட்டனர். ஆனால், அதுகுறித்து என்னிடம் அவர் மனம் விட்டு பேசியிருந்தாலே அந்த பிரச்சனையில் இருந்து அவரை எப்படியாவது மீட்டிருப்பேன். ஆனால், என்னிடம் எதுவுமே சொல்லாமல் வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு சென்றார்.
கடவுள் சும்மா விடமாட்டார்
திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்கிற செய்தி வந்ததும் நான் இடிந்தே போய்விட்டேன். என் குழந்தைக்காக என்னை என் அம்மா எவ்வளவோ போராடி தேற்றினார். நிச்சயம் என் கணவர் மரணத்திற்கு காரணமானவர்களை கடவுள் சும்மா விடமாட்டார் என சாபம் விட்டுள்ளார்.
வீடுமுழுக்க போட்டோ
கணவர் நினைவில் இருந்து நான் மீள வேண்டும் என்பதற்காக வீடு முழுக்க அவருடன் இருக்கும் போட்டோக்களை சொந்தக்காரர்கள் அகற்ற சொன்னார்கள். ஆனால், அவர் நினைவு எப்போதுமே என் நெஞ்சில் நிறைந்து இருப்பதால் ஒரு புகைப்படத்தை கூட அகற்ற மாட்டேன் என உறுதியாக சொல்லி விட்டேன். அவர் எப்போதுமே என் கூட இருப்பார் என்றும் உருக்கமாக கூறியுள்ளார் நடிகை ராகவி.