Don't Miss!
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அவ்வளவு அழுத்தம் கொடுத்து என் கணவரை கொன்னுட்டானுங்க.. கடவுள் பார்த்துப்பாரு.. சீரியல் நடிகை ஆவேசம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தோள் மேல ராஜா சின்ன ரோஜா படத்தில் ஏறி நின்ன நடிகை ராகவி சசிகுமாரின் கண்ணீர் கதை பலரையும் உருக்கி வருகிறது.
சில படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரை நடிகையாக நீண்ட காலமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டு நடிகை ராகவியின் கணவர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பாட்ஷா இஸ் பேக்.. வயசானாலும் ஸ்டைலும் வேகமும் குறையவே இல்ல.. தெறிக்கவிடும் ரஜினியின் வீடியோ!
ராஜா சின்ன ரோஜா படத்தில்
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியான ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் வளர்ந்த குழந்தை நட்சத்திரமாக நடிகை ராகவி சினிமா உலகில் அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் ரஜினிகாந்தின் தோள் மீது ஏறி நிற்க வேண்டிய காட்சியில் நடிக்க மிகவும் பயந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
கணவர் தற்கொலை
8 ஆண்டுகள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த ராகவி சசிகுமார் திருமணம் 13 ஆண்டுகள் சந்தோஷமாக கடந்த நிலையில், திடீரென அவரது கணவர் கடந்த 2019ம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
திருட்டு பட்டம்
வேலை இடத்தில் கேமிராவை திருடிவிட்டார் என திருட்டு பட்டம் கட்டி என் கணவருக்கு அதிகமான மன அழுத்தம் கொடுத்தே கொன்று விட்டனர். ஆனால், அதுகுறித்து என்னிடம் அவர் மனம் விட்டு பேசியிருந்தாலே அந்த பிரச்சனையில் இருந்து அவரை எப்படியாவது மீட்டிருப்பேன். ஆனால், என்னிடம் எதுவுமே சொல்லாமல் வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு சென்றார்.
கடவுள் சும்மா விடமாட்டார்
திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்கிற செய்தி வந்ததும் நான் இடிந்தே போய்விட்டேன். என் குழந்தைக்காக என்னை என் அம்மா எவ்வளவோ போராடி தேற்றினார். நிச்சயம் என் கணவர் மரணத்திற்கு காரணமானவர்களை கடவுள் சும்மா விடமாட்டார் என சாபம் விட்டுள்ளார்.
வீடுமுழுக்க போட்டோ
கணவர் நினைவில் இருந்து நான் மீள வேண்டும் என்பதற்காக வீடு முழுக்க அவருடன் இருக்கும் போட்டோக்களை சொந்தக்காரர்கள் அகற்ற சொன்னார்கள். ஆனால், அவர் நினைவு எப்போதுமே என் நெஞ்சில் நிறைந்து இருப்பதால் ஒரு புகைப்படத்தை கூட அகற்ற மாட்டேன் என உறுதியாக சொல்லி விட்டேன். அவர் எப்போதுமே என் கூட இருப்பார் என்றும் உருக்கமாக கூறியுள்ளார் நடிகை ராகவி.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க