Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
போலி இன்ஸ்டா கணக்கில் சரமாரி அவதூறு.. பிரபல சின்னத்திரை நடிகை சைபர் கிரைமில் புகார்!
சென்னை: பிரபல சின்னத்திரை நடிகை, தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகை ஷாமிலி. இவர் ரோஜா, தென்றல், சரவணன் மீனாட்சி உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் சில திரைப்படத்திலும் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.
போலி கணக்கு
இவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர். தவிர யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்; அதில், லைப் ஸ்டைல் தொடர்பான தனது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
போலி கணக்கு
இதனால் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களையும் கமென்ட்களையும் குவிப்பார்கள். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நடிகை ஷாமிலி சுகுமார் பெயரில், போலியான இன்ஸ்டா கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதைப் பார்த்தார்.
அவதூறு கருத்துகள்
இதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்தக் கணக்கில் ஷாமிலி பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துகள் பகிரப்பட்டுள்ளது. மேலும், ஷாமிலி, இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
சைபர்கிரைமில் புகார்
இதைக் கண்டு ஷாக் ஆன, ஷாமிலி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னைப் பற்றி அவதூறாகப் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். ஷாமிலியின் புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்ம நபர்கள்
கடந்த சில வருடங்களாக சினிமா, சின்னத்திரை நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் சமூக வலைதளக் கணக்குகளை முடக்கி வருவதை சில மர்மநபர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், போலி கணக்கு தொடங்கி, நடிகையை பற்றி அவதூறாகக் கருத்துக் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்