Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
101 ஏசிகளை வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டிய பிரபல டிவி தொகுப்பாளினி அனிஷா.. மோசடி வழக்கில் கைது!
சென்னையில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அனிஷா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அனிஷா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடித்துவிட்டு கார் ஓட்டுவது, குடிபோதையில் ஆட்டம் போடுவது என டிவி தொகுப்பாளினிகள் சின்னத்திரை நட்சத்திரங்கள் பெயர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது.
அண்மையில் பாலியல் வழக்கில் சின்னத்திரை நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிராக காவல்துறையை விமர்சித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டார்.
அனிஷா என்கிற பூர்ணிமா
இந்நிலையில் மோசடி வழக்கில் பிரபல டிவி தொகுப்பாளினி அனிஷா கைது செய்யப்பட்டுள்ளார். நெசப்பாக்கத்தை சேர்ந்த அனிஷா என்கிற பூர்ணிமா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக உள்ளார்.
101 ஏசிகள்
அனிஷாவும் அவரது கணவர் சக்திமுருகனும் ஸ்கை எக்யூப்மென்ட் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்துவந்தனர். இந்நிலையில் கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த்குமார் என்பவர் வைந்திருந்த நிறுவனத்தில் 101 வீட்டு ஏசிகளை அவர்கள் மொத்தமாக வாங்கியுள்ளனர்.
பணம் கேட்ட கடைக்காரர்
அதற்கான தொகையை செக்காக கொடுத்துள்ளார் அனிஷா. ஆனால் அந்த கணக்கில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்த், அனிஷா மற்றும் அவரது கணவரிடம் பணம் கேட்டுள்ளார்.
மிரட்டிய அனிஷா கைது
ஆனால் பணம் கொடுக்காமல் நழுவிய அனிஷா உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை அனிஷாவையும் அவரது கணவரின் சகோதரர் ஹரிகுமாரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
கணவர் தலைமறைவு
அனிஷாவின் கணவர் சக்திமுருகன் தலைமறைவாகி உள்ள நிலையில் இவர்கள் நடத்திவந்த ட்ராவல்ஸ் ஏஜென்சியிலும் பல மோசடிகள் நடந்துள்ளதாக போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அனிஷாவின் கணவர் சக்திமுருகனை போலீசார் தேடிவருகின்றனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்