Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'விக்ரம் நடிக்கும் கரிகாலன் என் கதை' - டிவி இசையமைப்பாளர் புகார்
ராஜசேகரன் என்ற நாகராஜ் (வயது 41) சென்னை போரூரை சேர்ந்தவர். நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் கொடுத்த பரபரப்பான புகார்:
நான் டி.வி. தொடர் இசையமைப்பாளராக உள்ளேன். நடிகர் விக்ரம் நடித்து, விரைவில் வெளிவரவுள்ள 'கரிகாலன்' படக்கதை என்னுடைய கதையாகும். அந்த கதையை நான் முறையாக பதிவு செய்து வைத்துள்ளேன்.
இந்தக் கதையை வைத்து படம் எடுக்க பல்வேறு படக்கம்பெனிகளை தொடர்பு கொண்டு வந்தேன். இப்போது அந்த கதையை வைத்து என்னிடம் அனுமதி பெறாமல் 'கரிகாலன்' படம் எடுக்கப்படுகிறது. விரைவில் அந்த படம் வெளிவர உள்ளது.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 'கரிகாலன்' படம் வெளிவருவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.