Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகையை பலாத்காரம் செய்த டிவி சீரியல் தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை
மும்பை: நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீரா இந்தி தொலைக்காட்சி தொடரின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் முகேஷ் மிஸ்ரா(33). அவர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீரா சீரியலில் நடித்த நடிகை ஒருவரை தனது பைக்கில் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
ஸ்பாட்டுக்கு வந்த பிறகு மேக்கப் அறைக்கு சென்றுள்ளார் நடிகை(வயது 31). மிஸ்ரா அந்த நடிகையை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன் மகளை கொலை செய்துவிடுவேன் என்று மிஸ்ரா மிரட்டியுள்ளார்.
2013ம் ஆண்டு அந்த நடிகை தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பத்திரிகையாளரான தனது கணவரிடம் கூற அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மிஸ்ராவை வெளியேற்றது வீரா தொடர் நிர்வாகம்.
பலாத்கார வழக்கை விசாரித்த நீதிமன்றம் மிஸ்ராவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.