Just In
- just now
இமான் காட்டில் பெரிய நடிகர்கள் வரவு.. செம மழை.. இசை மழையும் கூட
- 28 min ago
சொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு!
- 1 hr ago
சன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்!
- 1 hr ago
சிறுமியுடன் திருமணம்.. லஞ்சம் தந்து போலி ஐடி கார்டு.. சர்ச்சைகளுக்குப் பேர் போன பிரபல பாடகர் கைது!
Don't Miss!
- Automobiles
சிட்டாக பறந்த சூப்பர் பைக்... பொறி வைத்து பிடித்த போலீஸ்... இருசக்கர வாகன ஓட்டி சிக்கியதன் பின்னணி..
- News
மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்.. விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு
- Finance
ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..!
- Education
வேலை, வேலை, வேலை.! ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை!!
- Lifestyle
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- Sports
ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் காதலனுடன் எஸ்கேப்
தனியார் டிவியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்ரீவித்யாவை அவரது காதலனும், முன்னாள் அமைச்சரின்அக்கா மகனும் காரில் கடத்திச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நந்தனம் பகுதியில் உள்ள டவர் பிளாக்கில் வசிப்பவர் மோகன் ராம். இவரது மகள் ஸ்ரீவித்யா (22).இவர் தனியார் டிவி ஒன்றில் தேன்கிண்ணம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
அதே டிவியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் நாதன் (25). இவர்கள் இருவருக்கும் காதல்ஏற்பட்டது.
இந்தக் காதலுக்கு ஸ்ரீவித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந் நிலையில் ஸ்ரீவித்யா அவரதுதாயாருடன் கோயிலுக்குச் காரில் சென்றார். காரை ஸ்ரீவித்யாவே ஒட்டினார். பின்பு கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.
சரியாக 2 மணிக்கு கார் வீட்டை நெருங்கியது. அப்போது வீட்டின் எதிரே மாருதி ஜென் கார் ஒன்று நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த ஸ்ரீவித்யா, தன்னுடைய காரை அந்த கார் அருகில் நிறுத்தினார்.
நிறுத்திய மறு நிமிடம் கீழே இறங்கிய ஸ்ரீவித்யா, அங்கு நின்றிருந்த மாருதி காரில் ஏற முயன்றார். இதைச் சற்றும்எதிர்பார்க்காத அவரது தாயார், ஸ்ரீவித்யாயை தடுக்க முயன்றார். ஆனால் காரில் இருந்த நாதன், அவர் நண்பர்கோகுல் இருவரும் ஸ்ரீவித்யா கையைப் பிடித்து இழுத்து போட்டுக் கொண்டு பறந்தனர்.
இதை அறிந்த மோகன்ராம் அதிர்ச்சியடைந்தார். பிறகு மோகன் ராம் மனைவியுடன் அபிராமபுரம் காவல்நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார்.
அதில் நாதனும், முன்னாள் அமைச்சரின் அக்கா மகனும், ஸ்ரீவித்யாவை காரில் கடத்திச் சென்று விட்டனர்.எனவே தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஸ்ரீவித்யா உட்பட மூவரையும் தேடி வருகின்றார்.